அப்பாவுடன் வெளியில் செல்லும்போது ஆபத்தில் சிக்கியுள்ளார் அமிர்தா.
Baakiyalakshmi Episode Update 31.03.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எனில் தனது தாத்தாவிடம் அப்பா அம்மா போட்டோவை காட்டி இதை எதுக்கு கொண்டு போனீங்க யாரிடம் காட்ட கொண்டு போனீங்க என கேட்க அவர் ராதிகாவை பற்றி சொல்ல முயற்சி செய்ய எழில் சரி நீங்க டென்ஷன் ஆகாதீங்க அமைதியாயிருந்த என அவரை அமைதிப்படுத்தி விட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
பிறகு அமிர்தா வீட்டிற்கு போன எழில் தன்னுடைய அப்பா மற்றும் தாத்தா பற்றி சொல்லி வருத்தப்பட்டு கண் கலங்குகிறார். எங்க அப்பா செய்த வேலை எல்லாம் ஒரு நாள் கண்டிப்பா வீட்டுக்கு தெரிய வரும் அன்னைக்கு குடும்பத்தில் இருப்பவர்கள் என்ன ஆவாங்கனு எனவே யோசிக்கக் கூட முடியல ரொம்ப பயமாருக்கு கண்கலங்கிய எல்லாம் சரியாகிடும் பார்த்துக்கலாம் என தனது தோள் மீது எழிலை சாய்த்துக்கொண்டு ஆறுதல் கூறுகிறார் அமிர்தா.
இந்த நேரத்தில் அமிர்தாவின் அம்மா உள்ளே வந்து விட பிறகு அமிர்தா அவரை எழுப்பி விட்டு டீ போட்டு வரேன் என்று உள்ளே சென்று விடுகிறார். உள்ளே சென்றதும் அவருடைய அம்மாவிடம் இல்ல எழில் ரொம்ப வருத்தப்பட்டு அழுதார் எனக்கு என்ன பண்றதுனே தெரியல என சொல்ல நான் உன்ன தப்பா நினைக்கல. காலப்போக்குல எழில் மேல நீ ஆசைப்பட்டாலும் நாங்க எதுவும் சொல்ல மாட்டோம் ஆனா அவனால அதிக நம்பிக்கை வைக்காத, ஏற்கனவே ரொம்ப வருத்தப்பட்டு விட்டோம் என சொல்கிறார்.
அதன் பிறகு இந்தப் பக்கம் வீட்டுக்கு வந்த கூறி தனது அம்மாவிடம் ஏன் டல்லா இருக்கீங்க என்னாச்சு என கேட்க அவர் உங்க அப்பா காலையில வெளியே போனதுல இருந்து ரொம்ப கவலையா இருக்கு. அதிலிருந்து மீண்டு வரவே முடியவில்லை என சொல்கிறார். பிறகு கோபி எங்க போயிட்டாரு என விசாரிக்க ராதிகா வீட்டு கிட்ட விழுந்து கிடந்தார் என சொல்வதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். மனிஷன் ராதிகா வீட்டுக்குத்தான் போயிருக்காரு, நல்லவேளை ராதிகா வீட்டை மாத்திட்டோம், இல்லன்னா மாட்டியிருப்பேன் என கூறுகிறார்.
அதன் பின்னர் இனியா நாளைக்கு எனக்கு ரிசல்ட் என சொல்லி பயப்படுகிறார். கோபி அதெல்லாம் நீ நல்ல மார்க் தான் எடுப்ப என கூறுகிறார். மறு நாள் காலை எல்லோரும் ரிசல்ட்டுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். பிறகு செழியன் ரிசல்ட் பார்த்து இனியா 485 மார்க் எடுத்து இருப்பதாக கூறுகிறார்.
வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். எழில் ஸ்வீட் வாங்கி வந்து கொடுத்து வாழ்த்துக் கூறுகிறார். இந்த பக்கம் அமிர்தா தன்னுடைய அப்பாவுடன் வெளியில் சென்று இருக்க அப்போது ஒரு ரவுடி பையன் அமிர்தாவிடம் சினிமாவுக்கு போகலாம் வா என பிரச்சினை செய்கிறார். இதைத் தட்டிக்கேட்ட அவரின் அப்பாவை பிடித்து கீழே தள்ளி விடுகிறார். இத்துடன் இன்றைய சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
ஏற்கனவே இது குறித்து வெளியாகியுள்ள வீடியோவில் அந்த ரவுடியிடம் அமிர்தாவோட புருஷன் நாள் தான் என சொல்லி சண்டை போடுகிறார். இது குறித்த காட்சிகள் நாளை ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.