இனியாவின் ஸ்கூல் வேன் விபத்தில் சிக்கி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா மற்றும் ஜெனி என இருவரும் ராஜசேகர் உடன் கேண்டீன் ஆர்டருக்காக வந்து இருக்கின்றனர். ஆர்டர் குறித்த விஷயங்களை பேசிவிட்டு எங்களால் முடியும் என வாக்கு கொடுக்க முன் பணம் ஆக ஏழு லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என கூறுகின்றனர்.

அதன் பிறகு பாக்கியா மற்றும் ஜெனி என இருவரும் வெளியில் வந்து பேசிக் கொண்டிருக்கும் போது தான் தெரிகிறது இது ராதிகா வேலை செய்யும் ஆபீஸ். இவர்கள் இருவரையும் பார்த்த ராதிகா அதிர்ச்சியாகி பிறகு ஓனரிடம் சென்று யார் அவர்கள் என்ன ஏது என விசாரிக்க கேண்டீன் ஆர்டர் எடுப்பதற்காக வந்திருப்பவர்கள், உங்களுக்கு புடிக்கலைன்னா சொல்லுங்க மாத்திடலாம் என சொல்ல அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என ராதிகா கூறிவிடுகிறார்.

பிறகு கோபி மற்றும் ராதிகா ஒரு ரெஸ்டாரண்டில் காபி குடித்துக் கொண்டிருக்கும் போது கோபி நான் இனியா முன்னாடி அப்படி உன்ன பேசியிருக்கக் கூடாது எல்லா தப்பும் என்னுடையதுதான் என மன்னிப்பு கேட்க ராதிகா இனியாவை கண்டிக்காமல் என்னை திட்டுவது எனக்கு கஷ்டமா இருக்கு என கூறுகிறார்.

அதன் பிறகு ராதிகா தன்னுடைய ஆபீசுக்கு பாக்கியா மற்றும் ஜெனி வந்து இந்த விஷயத்தை சொல்ல கோபி எதுக்காக வந்தாங்க என்ன ஏது என விசாரிக்க கேட்டரிங் ஆர்டர் எடுப்பதற்காக வந்ததாக கூறுகிறார். நான் ஓகே சொன்னா தான் அவங்களுக்கு கேன்டீன் ஆர்டர் கிடைக்கும் என ராதிகா சொல்ல கோபி அதெல்லாம் கொடுக்காத, பிராடு அவளால அவ்வளவு பெரிய ஆர்டர் எல்லாம் பண்ண முடியாது என சொல்ல திறமை இருந்தா முன்னுக்கு வரட்டும் என்னால அப்படி எல்லாம் சொல்ல முடியாது என ராதிகா கூறுகிறார்.

அடுத்து கோபிக்கு ஸ்கூலில் இருந்து போன் வர அந்த போனில் இனியா பிக்னிக் போய் இருந்த வேன் ஆக்சிடென்ட் ஆகிவிட்டதாகவும் குழந்தைகளுக்கு எந்த பிரச்சினையும் இல்ல ஸ்கூலுக்கு திருப்பி கூட்டிட்டு வருவதாகவும் சொல்ல அதிர்ச்சியாகும் கோபி ஸ்கூலுக்கு கிளம்பி செல்கிறார்.

இந்த பக்கம் எழில் அமிர்தாவின் போட்டோவை பார்த்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க அப்போது ஈஸ்வரி என்னடா பாக்குற என கேட்க ஒரு வழியாக எழில் சூட்டிங் ஸ்பாட் போட்டோ என சமாளித்து விடுகிறார். அதன் பிறகு பாக்கியா கேட்டரிங் ஆர்டர் கிடைத்த விஷயத்தையும் ஏழு லட்சம் ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்ற விஷயத்தை சொல்ல எல்லோரும் அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது நிகிதாவின் அம்மா போன் போட்டு இனியா பிக்னிக் போன வேன் ஆக்சிடென்ட் ஆகிவிட்டது என சொல்ல பாக்கியா அதைக் கேட்டு அதிர்ச்சடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.