Baakiyalakshmi Episode Update 28.08.23
Baakiyalakshmi Episode Update 28.08.23

இனியாவுக்கு ஷாக் கொடுத்துள்ளார் கோபி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி இனியா உடன் கேரளா போகணும் என்று சொல்ல ராதிகா அப்படின்னா மயூவோட ஃபங்ஷனுக்கு நீங்க இருக்க மாட்டீங்க அப்படித்தானே என்று கோபப்பட கோபி ஒரு நான்கு நாள் தள்ளி வைத்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார்.

ராதிகாவின் அம்மா அப்படியெல்லாம் தள்ளி வைக்க முடியாது நீங்க உங்க பொண்ணோட போற ட்ரிப் தள்ளி வைங்க என்று சொல்ல அது எஜுகேஷன் சம்பந்தமான ட்ரிப் தள்ளி வைக்க முடியாது என்று கோபி சொல்ல ராதிகா நீங்க இனியாவோட ட்ரிப் போனீங்கன்னா அப்படியே போயிடுங்க உங்கள அந்த வீட்டிலும் சேர்த்துக்க மாட்டாங்க அதோட நீங்க கேரளா கர்நாடகா ஆந்திரானு கார்லயே சுத்திக்கிட்டு இருங்க என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.

பிறகு கோபி இனியவை சந்தித்து ட்ரிப்புக்கு வர முடியாது என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்க இனியா கோபப்படுகிறார். உங்களுக்கு என்னை விட மயூ தான் ரொம்ப முக்கியமா போயிட்டா என்று ஆவேசப்பட கோபி செழியனிடம் பேசி உன்னை ட்ரிப்புக்கு கூட்டிட்டு போக சொல்றேன். அவன் என்னுடைய பையன் நான் சொன்னா கண்டிப்பா கேட்பான் என ஓவர் பில்டப் கொடுத்து விட்டு வீட்டிற்கு வருகிறார்.

அதனைத் தொடர்ந்து கோபி செழியனுக்கு போன் செய்ய மாலினி வீட்டில் இருக்கும் செழியன் போனை எடுத்து பேச இனியாவை கேரளா ட்ரிப் அழைத்துப் போக சொல்ல எனக்கு அவ்வளவு நாள் ஆபீஸ்ல லீவ் கிடைக்காது அதுக்கு வாய்ப்பே கிடையாது என்று போனை வைத்துவிட கோபி மூஞ்சில அடிச்சா மாதிரி போன வச்சுட்டான் இவனை நம்பி வேற ஓவர் பில்டப் கொடுத்துட்டேன் என புலம்புகிறார்.

இன்னொரு பக்கம் இனியா டாடி ட்ரிப்புக்கு வர முடியாதுன்னு சொல்லிட்டாரு என்று வீட்டில் டென்ஷனாக உட்கார்ந்து இருக்க கோபி போன் செய்து செழியனுக்கு ஒரு வாரம் லீவு கிடைக்காதுன்னு சொல்லிட்டான் என்று சொல்லி திரும்பவும் அதிர்ச்சி கொடுக்கிறார். இதனால் இனியா என் ட்ரிப் அவ்வளவு தான் என்று புலம்பி கொண்டிருக்கிறார். எழில் வீட்டுக்கு வந்து ஒரு ப்ராஜெக்ட் கிடைத்திருப்பதாகவும் அடுத்து இரண்டு நாள் சூட்டிங் இருப்பதாகவும் சொல்ல எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.

இனியா மட்டும் டல்லாக இருக்க எழில் காரணம் கேட்க நடந்த விஷயத்தை சொல்கின்றனர். ரெண்டு நாள் மட்டும் வெயிட் பண்ணு நானே உன்னை கூட்டிட்டு போய் வந்துடறேன் என்று சொல்ல இனியா இது முக்கியமான ட்ரிப் என்று கூறுகிறார். அடுத்ததாக பாக்கியா செழியனுக்கு போன் செய்து ட்ரிப்புக்கு போயிட்டு வர சொல்லி கேட்க அம்மாவிடமும் செழியன் கண்டிப்பா முடியாது வேணும்னா ஒன்னு பண்ணலாம் இனியாவை அவளோட ட்ரிப்பை கேன்சல் பண்ண சொல்லுங்க என்று சொல்லி ஷாக் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.