கணேஷ் அமிர்தாவை சந்திக்க பாக்கியா மொத்த குடும்பத்துக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா எழில் மற்றும் அமிர்தாவை கோவிலுக்கு அனுப்பி வைத்துவிட்டு பதற்றமாக இருக்க ராமமூர்த்தி என்னம்மா ஏதாவது பிரச்சனையா என்று கேட்க ஆமா மாமா பெரிய பிரச்சனைதான் என்று சொல்ல என்னனு சொல்லுமா வயித்துல புளியை கரைக்கிறது என்று கேட்க எல்லாரும் வந்து விடட்டும் மாமா மொத்த பேருக்கும் சேர்த்து சொல்கிறேன் அதுவரைக்கும் என்னை கேட்காதீங்க என்று உள்ளே சென்று விடுகிறார்.
அமிர்தா மற்றும் எழில் இருவரும் கோவிலுக்கு கிளம்ப அந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வந்து விடும் கணேஷ் நான் பாக்க கூடாது என்பதற்காகவே வெளியே அனுப்பி வைக்கிறீர்களா இன்னைக்கு இருக்கு என்று சொல்லி அவர்களை பின்தொடர்ந்து கோவிலுக்கு வருகிறார்.
மறுபக்கம் பாக்யா எல்லாரையும் கூட்டி உட்கார வைத்து ஒவ்வொரு உண்மைகளாக உடைக்க அதை கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
கடைசியாக கணேஷ் உயிரோடு வந்து அமிர்தாவையும் நிலாவையும் கேட்பதாக சொல்ல அதைக் கேட்டு உச்சகட்ட அதிர்ச்சி அடைகின்றனர். மறுபக்கம் அமிர்தாவை பார்க்க கணேஷ் முயற்சி செய்து கொண்டே இருக்க எழில் கூடவே இருப்பதால் அது முடியாமல் போகிறது.
கடைசியாக அமிர்தா நிலாவிற்காக ஒரு பரிகாரம் பண்ணனும் அத பத்தி கேட்டுவிட்டு வருகிறேன் என்று அமிர்த கோவிலுக்குள் எழுந்து வர அன்று கணேஷ் வந்து எதிரில் நிற்க அமிர்தா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.