பாக்யாவை கோபி அவமானப்படுத்த ஈஸ்வரி அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கோபி பாக்கியா மற்றும் பழனிச்சாமி இருவரும் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அவமானப்படுத்தி பேசுகிறார். 

இன்னும் கொஞ்ச நேரம் லேட்டா வந்து இருந்தா ரெண்டு பேரும் ரூமுக்குள்ள போய் பேசி இருப்பீர்கள் என எல்லை மீறி பேச பாக்கியா இப்போது நிறுத்துங்க என தடுத்து நிறுத்த என் வீட்டுல இதெல்லாம் அனுமதிக்க முடியாது என கோபி பேச எது உங்க வீடு இது நான் வாங்கின வீடு, வெளியில போய் பாருங்க பாக்கியலட்சுமி இல்லம்னு பெருசா பேர் போட்டிருக்கும் என பதிலடி கொடுக்கிறார். 

மேலும் இந்த வீட்டில யார் இருக்கணும் இருக்கக்கூடாதுன்னு முடிவு பண்ண வேண்டியது நான் தான் போங்க விட என்று கோபியை வெளியே போக சொல்ல பழனிச்சாமி என்னால உங்களுக்குள்ள பிரச்சனை வேண்டாம் என வெளியே கிளம்பி விடுகிறார். கையும் களவுமாக மாட்டின பிறகு எஸ்கேப் ஆகிறான் பாரு அவன் தான் ஜென்டில்மேன் என கோபி நக்கலாக பேசி சிரிக்க பாக்கியா கோபப்பட்டு பேசுகிறார். 

இதை வீட்டை விட்டு போக முடியாது என்ன பண்ணுவ இன்னிக்கு உன்னை சும்மா விடமாட்டேன் என கோபி ரூமுக்கு சென்று விட அதனைத் தொடர்ந்து எழில், அமிர்தா வீட்டிற்கு வருகின்றனர். 

பிறகு ஈஸ்வரி ராமமூர்த்தி வீட்டுக்கு வந்துவிட கோபி இனிமேல் என்னால இந்த வீட்டில் இருக்க முடியாது வீட்டு ஓனர் என்னை வெளியே போக சொல்லிட்டாங்க என்று சொன்ன ஈஸ்வரி பாக்யாவை கூப்பிட்டு கோபப்படுகிறார். என் பையன விட அந்த பழனிச்சாமி உனக்கு முக்கியமா போய்ட்டானா என்று கேட்க பழனிச்சாமி இடத்தில் யாராவது இருந்தாலும் எனக்கு அவங்க தான் முக்கியம் என பாக்கியா பதிலடி கொடுக்கிறார். 

அதோடு கோபி பழனிச்சாமியுடன் தொடர்பு படுத்தி பேசிய விஷயத்தை சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். கோபியுடன் சண்டைக்கு போகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.