எழில் கோபியை கொல்ல துணிந்த நிலையில் கடைசியில் பெரிய இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் எழில் கோபியை கொல்ல கத்தி எடுக்க எல்லோரும் தடுத்து நிறுத்த பிறகு தாத்தா அவனை பெத்த பாவத்துக்கு நானே கொல்றேன் என கத்தியை வாங்க பாக்யா யாரும் எதுவும் பண்ண வேண்டாம். நீங்க இருக்கிற தைரியத்தில் தான் நான் எல்லாத்தையும் கல்லு மாதிரி பொறுத்துக்கிட்டு இருக்கேன்‌ என கண்கலங்கி அழ பிறகு பாக்யாவுக்கு ஆறுதல் கூறுகின்றனர்.

அடுத்து இனியா ஸ்கூலுக்கு எழிலுடன் கிளம்ப இந்த பக்கம் கோபி மயூவை ஸ்கூலுக்கு அழைத்துச் செல்ல வருகிறார். இதைப் பார்த்து பாக்கியாவின் குடும்பத்தார் அதிர்ச்சியாக கோபி கிளம்பி விட அதன் பிறகு ஈஸ்வரி அவன முதல்ல இங்கிருந்து கிளம்பி போக சொல்லுங்க நம்பள கஷ்டப்படுத்தனும்னு இங்க வந்து இருக்கானா? இனியா பைக்ல போறா அவ கார்ல போறா, இனியாவோட மனசு எவ்வளவு கஷ்டப்படும் என பேச பாக்கியா எதுவும் பண்ண வேண்டாம் அவர் எதுவும் கேட்க மாட்டார் என சொல்கிறார்.

கோபியின் அப்பா அவன் இங்கேயே இருக்கட்டும் அவனால நம்ப கஷ்டப்பட போறது கிடையாது நம்ப யாருக்கும் கெட்டது நினைச்சது இல்ல, அது அப்படியே ஆப்போசிட்டா தான் நடக்கப்போகுது, அவன் நான் தப்பு பண்ணிட்டேனே கத்தி கதறுகிற நாள் சீக்கிரம் வரும் என கூறுகிறார்.

அடுத்து பாக்கியா ராஜசேகரை பார்க்க போக அங்கு அவர் பாக்கியாவின் வேலையை பாராட்டுவது மட்டுமல்லாமல் அனைத்து மண்டபங்களிலும் சமைக்கும் மொத்த ஆர்டரையும் கொடுக்கிறார்.

அடுத்து கோபி காரில் வர ராமமூர்த்தி நடந்து வர கார் ஹாரன் அடிக்க உடனே ராமமூர்த்தி கல்லை தூக்கி கார் மீது எரிகிறார். பிறகு இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்க நான் சந்தோஷமாக இருப்பதை நீங்க பார்க்க தான் போறீங்க என்று கோபி சொல்ல நீ எவ்வளவு சந்தோஷமா இருக்கேனு நானும் பாக்க தான் போறேன் என சவால் விட்டுட்டு செல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.