பாக்கியாவுக்கு கணேஷ் மார்னிங் ஒரு பக்கம் இருக்க செழியனை அடிக்க பாய்ந்து உள்ளார் ஜோசப். 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் பாக்யாவுக்கு போன் செய்யும் கணேஷ் நீங்க கொடுத்த டைம் முடிஞ்சு போச்சு என அதிர்ச்சி கொடுத்து போனை வைக்க பாக்கியா செய்வதறியாது இருக்கிறார்.  

அதனைத் தொடர்ந்து செழியன் மற்றும் எழில் ஆகியோர் ஜெனியை பார்க்க வீட்டுக்கு வந்து ஜெனியை கூப்பிட ஜோசப் இருவரையும் தடுத்து நிறுத்தி வெளியே போக சொல்கிறார். நான் ஜெனியை பார்க்க வேண்டும் என செழியன் அடம் பிடிக்க ஜெனியின் அம்மா அவரை ரூமுக்குள் வைத்து கதவை சாற்றி விட ஒரு கட்டத்தில் ஜோசப் செழியன் அடிக்க கை வாங்க எழில் கையைப் பிடித்து தடுத்து நிறுத்துகிறார். 

அடுத்து வீட்டுக்கு வந்த பிறகு எழில் நடந்த விஷயங்களை சொல்ல கோபி செழியனுக்கு ஆறுதல் சொல்ல பாக்யாவை பார்த்ததும் செழியன் அவரை கட்டிப்பிடித்து அழ அவரும் ஆறுதல் கூறுகிறார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி கண்கலங்கி அழுது கொண்டிருக்க ராதிகா அவருக்கு ஆறுதல் கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.