ராதிகா வீட்டுக்கு கோபி வர ஈஸ்வரி அதிர்ச்சி கொண்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் அமிர்தாவின் அம்மா கணேஷ் மற்றும் அவருடைய அப்பா அம்மாவை சந்தித்து அமிர்தாவோட வாழ்க்கையில வராதீங்க என எச்சரிக்க கணேஷ் நான் போய் பார்த்து கூட்டிட்டு வருவேன் என அதிர்ச்சி கொடுக்கிறார்.
அதைத் தொடர்ந்து அமிர்தாவின் அம்மா பாக்யா வீட்டிற்கு வந்து சென்னைக்கு வாழ்த்து சொல்லி குழந்தைக்கு வளையல் கொடுத்து பிறகு அமிர்தாவிடம் சென்று உன் வாழ்க்கை நெனச்சா எனக்கு பயமா இருக்கு ஒரு ஜோசியரை பார்த்ததாக சொல்ல அமிர்தா ஏன் இப்படியெல்லாம் பண்ணிட்டு இருக்க என திட்டுகிறார்.
இந்த நேரம் பார்த்து பாக்கியா ரூமுக்குள் வந்து விட பிறகு அமிர்தாவை காபி போட்டு வர சொல்லி அனுப்பிவிட்டு அவருடைய அம்மா பாக்கியாவிடம் கணேஷ் குறித்து பேச எனக்கும் என்ன பண்றதுன்னு தெரியல இந்த விஷயம் மட்டும் வீட்டுக்குள்ள தெரிஞ்சா பெரிய பிரச்சனையாகிடும் என சொல்ல என்ன பிரச்சனை வந்தாலும் நீங்க அமிர்தா பக்கம் தான் நிக்கணும் என கெஞ்சுகிறார்.
அதைத் தொடர்ந்து கோபி ராதிகா வீட்டிற்கு வந்து மயூவுடன் பேசிக்கொண்டு இருக்க ராதிகாவும் அவருடைய அம்மாவும் இங்கே எதுக்கு வந்தீங்க? என்று கேட்க உங்களை பார்த்துட்டு போக வந்தேன் என்று சொல்ல ராதிகா உங்க அம்மா எல்லாருக்கும் நான் தான் காரணம் என்று சொல்லும்போது ஒரு வார்த்தை கூட பேசல என சண்டை போட்டுக் கொண்டிருக்க அங்கு வந்த ஈஸ்வரி திரும்பவும் நீ இங்கு வரவே கூடாது என கோபியை கூட்டி செல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.