Baakiyalakshmi Episode Update 22.06.23
Baakiyalakshmi Episode Update 22.06.23

ராதிகாவால் வீட்டில் அடுத்த பிரச்சினை வெடிக்க கோபி இனியாவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பழனிச்சாமி இனியாவுக்கு ஒரு பேனாவை கிஃப்ட்டாக கொடுக்க அதன் விலை 4000 ரூபாய் என தெரிந்து எல்லோரும் ஷாக்காகின்றனர். இனியாவிடம் பத்திரமா வச்சுக்க கண்ணு கீழ போட்டா உடைஞ்சு போயிடும் அவ்வளவுதான் என்று சொல்ல இதோ வரேன் என கோபி அங்கே வர இனியா ஆசையாக அதைக் கொண்டு போய் கோபியிடம் காட்ட அதை வாங்குவது போல் வாங்கி கை தவறி கீழே போட்டது போல போட்டு உடைக்கிறார்.

உடனே இனியா பதறி போய் கண்கலங்க கோபி சாரி கேட்டு நான் உனக்காக வேற பேனா வாங்கி வச்சிருக்கேன் என சொல்லி புதுப் பேனாவை எடுத்துக் கொடுக்க இனியா சமாதானம் ஆகி விடுகிறார். பிறகு இனியாவை ஸ்கூலுக்கு கூட்டிக்கொண்டு கிளம்பிய கோபி இனிமேல் எதுவாக இருந்தாலும் டாடி கிட்ட கேளு, அவர் ஏதாச்சு கிப்ட் கொடுத்தா வாங்காதே என சொல்கிறார்.

இங்கே பாக்கியா பழனிச்சாமியிடம் மன்னிப்பு கேட்க அவர் அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல விடுங்க என சொல்கிறார் பிறகு உங்களுக்காக பாண்டிச்சேரி மினிஸ்டர் வீட்டில் ஒரு கேட்டரிங் ஆர்டர் எடுத்து இருக்கேன். பெரிய கல்யாணம் மூணு நாள் அங்கேயே தங்கியிருந்து சமைக்கணும் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 5 ஆயிரம் 6 ஆயிரம் பேருக்கு சமைக்கணும் என சொல்ல பாக்கியா இது ரொம்ப பெரிய ஆர்டர், அது மட்டுமல்லாமல் இனியாவுக்கு பரீட்சை டைம் என்பதால் விட்டுட்டு வர முடியாது, என்னால் இந்த ஆர்டர் எடுத்து பண்ண முடியாது என சொல்லி விடுகிறார்.

அதன் பிறகு ஜெனி மற்றும் ஈஸ்வரி இருவரும் உக்காந்து பேசிக் கொண்டிருக்கும் போது ராதிகாவின் அண்ணா அண்ணி வீட்டுக்கு வர ஈஸ்வரி நில்லுங்க யார் நீங்க நேரா வீட்டுக்குள்ள வந்துகிட்டு இருக்கீங்க என்று கேட்க அந்த சமயம் பார்த்து கோபி வந்து வாங்க சந்துரு வாங்க என வரவேற்க பின்னாடியே ராதிகாவின் அம்மா வந்து இது மாப்பிள்ளையோட வீடு, மாப்பிள்ளை பேரிலேயே இருக்க வீடு மத்தவங்க எல்லாம் சும்மா இருக்காங்க என்று ஈஸ்வரியை மறைமுகமாக நக்கல் அடிக்கிறார்.

இதனால் ஈஸ்வரி கோபப்பட ஜெனி அவங்க வேணும்னு உங்ககிட்ட வம்பு இழுக்கறாங்க அமைதியா இருங்க என சொல்லி அமைதியாக்குகிறார். பிறகு கோபி சரி வாங்க ரூமுக்கு பேசலாம் என்று கூப்பிட மாமியார் ஏன் மேல போகணும்? இங்கேயே உட்கார்ந்து பேசலாம் என்று சொல்ல கோபி ஏசி இல்ல என்று சொல்லி ராதிகாவை கூப்பிட்டு விட பிறகு ராதிகா வந்து எல்லோரையும் மேலே கூட்டிச் செல்கிறார்.

அதனைத் தொடர்ந்து மேலே போன இவர்கள் அம்மா போலீச கூட்டிட்டு வந்ததும் எல்லாரும் பயந்து போய்ட்டாங்க என ராதிகா சொல்வதை கேட்டு ஈஸ்வரி இன்னும் கோபம் அடைகிறார். இதைத்தொடர்ந்து ராதிகா கீழே வந்து எல்லாரும் கொஞ்சம் வெளியே இருங்க நான் சமைக்கணும் கிச்சன் எடுத்துக்கிறேன் என்று சொல்ல ஈஸ்வரி என்ன ரொம்ப ஓவரா பண்ணிக்கிட்டு இருக்க? கூப்பிட்டு வந்தா தான் அவங்க கெஸ்ட், திறந்து வீட்ல ஏதோ நுழைகிற மாதிரி நுழைஞ்சா அவங்களுக்கு மரியாதை எல்லாம் கொடுக்க முடியாது.

உன் ஆத்தாக்காரி போலீச கூட்டிட்டு வந்து இல்லாததை எல்லாம் சொல்லுவா, இப்ப வந்து நடு வீட்டுல உட்கார்ந்து சாப்பிடுவா நான் கை கட்டிக்கிட்டு வேடிக்கை பாக்கணுமா? முடியாது என பேச ஈஸ்வரி மற்றும் ராதிகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இந்த சத்தம் கேட்டு கீழே வரும் ராதிகாவின் அம்மா என்ன சத்தம் ஓவரா இருக்கு திரும்பவும் போலீசை கூப்பிடனுமா? பழசை எல்லாம் மறந்துட்டீங்களா? என்று மிரட்டுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.