ராதிகா வீட்டிலிருந்த கோபிக்கு மயூ அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Baakiyalakshmi Episode Update 21.03.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் காலையில் விடிந்ததும் பாக்கியா கோபி வருவார் என காத்துக் கொண்டிருக்க கோபி வரவில்லை. திடீரென கார் சொத்து கேட்க ஓடிச்சென்று அவர் வந்து விட்டார் என பார்க்க கடைசியில் ஏமாற்றம்தான் மிஞ்சியது. மீண்டும் போன் செய்து பார்க்கலாம் என போன் செய்ய கோபி போனை எடுக்கவில்லை. என்னாச்சு எங்க இருக்கீங்க என வாய்ஸ் மெசேஜ் போட அதனைப் பார்த்துவிட்டு கோபி இவளுக்கு வேற வேலை இல்லை என போனை வைத்து விடுகிறார்.

பிறகு ராதிகா வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது மயூ போனில் சேட் செய்து கொண்டிருக்க யாருடன் சேட் என ராதிகா கேட்க இனியா அக்கா தான் என கூறுகிறார். நான் இனி அக்கா வீட்டுக்கு போகட்டுமா என கேட்க கோபி பதறிப்போய் வேண்டாம் என கூறுகிறார். நான் இங்கதான் இருக்கேன் என் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணு என சொல்கிறார்.

பிறகு சரி இனி அக்காவை இங்கே வரச் சொல்கிறேன் என சொல்ல அதுவும் வேண்டாம் என கூறுகிறார். ஏன் இனியா அக்கா கூட நீங்க விளையாட மாட்டீங்களா என கேட்க அவங்க யாருன்னு எனக்குத் தெரியாது இல்ல அதனால எப்படி விளையாடுகிறது என கோபி சமாளிக்கிறார். உடனே நாம புது வீட்டுக்கு போக போறோம் என சொல்ல இது நம்மளோட வீடு தானே இங்கே இருந்து யாரும் போக சொல்ல மாட்டாங்கன்னு மம்மி சொன்னாங்க என மயூ கூறுகிறார். என்ன பார்த்து இருக்க விடு இந்த வீட்டை விட இன்னும் சூப்பரா இருக்கும் என சொல்ல வேண்டாம் இது வீட்டிலேயே இருக்கலாம் இங்கு தான் எனக்கு தனி ரூம் இருக்கு என கூறுகிறார்.

அந்த வீட்டிலேயும் தனி ரூம் இருக்கு சூப்பரா இருக்கும் என போட்டோக்களைக் காட்டி ஒரு வழியாக சம்மதிக்க வைக்கிறார். திரும்பவும் இனியா என மயூ தொடங்க கோபி அதிர்ச்சி அடைய ராதிகா மயூவை சமாதானம் செய்கிறார்.

இந்த பக்கம் பாக்கியா சமைக்கும் இடத்தில் கோபி நைட் எல்லாம் வீட்டுக்கு வராதது பற்றி செல்வியிடம் சொல்லி கவலைப்படுகிறார். செல்வி இதெல்லாம் சரியா தெரியல அவ்வளவு தான் சொல்லுவேன் என கூறுகிறார். பிறகு பாக்யாவின் வீட்டுக்கு ஜெனியின் அம்மா வந்து செழியன் பேசியதைப் பற்றி கூறுகிறார். நான் அவன் கிட்ட பேசுறேன் என பாக்கியா கூறுகிறார்.

அதன்பிறகு ஜெனி, செழியன் வந்ததும் எங்க அப்பா அம்மாவை பார்த்து பேசின என கேட்க வேண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. நீ தப்பு மேல தப்பு பண்ணிகிட்டே இருக்கே என சொல்லி விட்டு கீழே சென்று விடுகிறார். இந்த பக்கம் கோபி ராதிகாவின் நேரத்தை செலவிட இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.