ராதிகாவுக்காக பாக்யா செய்த விஷயம் ராமமூர்த்தி சொன்ன வார்த்தை ஆகியவற்றால் கோபி அதிர்ச்சியடைந்துள்ளார். 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இது சீரியலில் இன்றைய எபிசோட்டில் கோபி மற்றும் ஈஸ்வரி இருவரும் பாக்கியா பற்றி பேச ராதிகா அவங்கள அவங்க பார்த்துப்பாங்க உங்க வேலையை நீங்க பாருங்க என கோபிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். 

உங்க பிசினஸ் இல்லையே ஏகப்பட்ட பிரச்சனை அதை எப்படி சரி பண்றதுன்னு பாருங்க என சொல்ல ஈஸ்வரி இவளுக்கு எல்லாம் தெரியுமா என்று மெதுவாக கேட்க கொஞ்சம் கொஞ்சம் என்று சொல்ல முழுசா சொல்லிடாத அப்புறம் உனக்கு மரியாதை இருக்காது என சொல்கிறார். 

மறுநாள் காலையில் பாக்கியா செழியனுக்கு காபி கொடுக்க செழியன் நடந்தவற்றிற்கு மன்னிப்பு கேட்க கொஞ்ச நாளைக்கு ஜெனியை டிஸ்டர்ப் பண்ணாம இது எல்லாம் நல்லபடியா நடக்கும் என்று ஆறுதல் சொல்லிவிட்டு எழுந்து வருகிறார். அடுத்து அங்கு வந்த ஈஸ்வரி செழியனை பார்க்கவே கஷ்டமா இருக்கு நீ கவலைப்பட மாட்டியா என்று கேட்கிறார். அதன் பிறகு கோபிக்கும் சேர்த்து காசு போட சொன்ன பாக்கியம் மறுப்பு தெரிவிக்க ராதிகா காலையிலிருந்து ஆளையே காணோம் எங்க போனான்னு தெரியல வீட்டுக்கு வந்து சொந்தக்காரங்களுக்கு காபி போட்டு கொடுக்க மாட்டியா அந்த மாதிரி தான் என்று சொல்லிவிட்டு சொல்ல வேறு வழியின்றி பாக்கியா காபி போட்டு கொடுக்கிறார். 

முதலில் ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரிக்கு கொடுத்துவிட்டு பிறகு கோபிக்கு கொடுக்க அவர் ஷாக்காக ஈஸ்வரி நான் தான் பாப்பா போட சொன்னேன் என்று சொல்ல காபி எடுத்து ரசித்து ருசித்து குடிக்க ராதிகா வந்து நிற்கிறார். உங்களுக்கு காபி கொடுத்துட்டாங்களா உங்க காபி கொடுக்கணும் தான் நான் சீக்கிரம் வந்தேன் என்று கூறுகிறார். 

ஈஸ்வரி அவன் எழுந்ததும் காபி குடிப்பான் அப்படியே பழகிட்டான் அந்த பழக்கத்தை எல்லாம் நீ மாத்தாத என்று சொல்ல எனக்கும்தான் எழுந்ததும் காபி குடிக்கணும் யார்கிட்ட போய் கேட்கிறது என்று சொல்ல பாக்கியா எழிலுக்காக வைத்திருந்த காபியை கொடுக்கிறார். எழில் இல்ல உங்களுக்கு வேணும்னா எடுத்துக்கோங்க என்று சொல்ல ராதிகா காபி எடுத்துக் கொண்டு நன்றி கூறுகிறார். 

இதைப் பார்த்து கோபி அதிர்ச்சி அடைய ராமமூர்த்தி இனிமேல்தான் டா உனக்கு இருக்கு, செத்த என நக்கல் அடிக்கிறார். அதைத்தொடர்ந்து வீட்டுக்கு பழனிச்சாமி வர கோபி போனில் பேசுவது போல அவரை கிட்ட பாக்கியா வந்து பழனிச்சாமி இடம் நலம் விசாரிக்க அவர் நீங்க உடனே கிளம்பி என் கூட வாங்க உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் ரொம்ப நாளா நீங்க ஆசைப்பட்ட விஷயம் என சொல்லி அழைக்க கோபி என்ன விஷயம் என்று புரியாமல் குழம்புகிறார். 

பாக்கியா கிச்சனுக்கு வந்து பர்ஸ் எடுத்துக்கொண்டு வெளியே கிளம்ப கோபி எங்க போற என்று கேட்க வர அங்கு இருக்கும் ராதிகா கையில் கரண்டி எடுத்து மிரட்ட ஷாக் ஆகி நிற்கிறார்.  இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.