எழில் விஷயத்தில் ஈஸ்வரி அதிரடி முடிவு எடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்யா ஆர்டர் கேன்சல் ஆன விஷயம் கேட்டு ஈஸ்வரி கோபப்படுகிறார். கோபி உன்ன திட்டுறதுல தப்பே இல்லை என சொல்லி கோபப்பட்டு உள்ளே எழுந்து செல்ல செழியன் பாட்டி சொல்றதுல தப்பில்லையே நீங்க புரிஞ்சுக்க மாட்டீங்க என சொல்லி உள்ளே எழுந்து செல்ல எழில் பாக்யாவை சமாதானம் செய்கிறார்.

அடுத்து ராதிகாவால் காண்ட்ராக்ட் கேன்சலான விஷயத்தை செல்வியிடம் பாக்கியா சொல்ல தேர்தல்ல தோத்த கோபத்துல இப்படி பண்ணி இருப்பா அவ நல்லாவே இருக்க மாட்டாள் என திட்டுகிறார். அடுத்து கோபியின் அப்பா வீட்டுக்கு வர அப்போது பாக்கியா சோகமாக இருப்பதை பார்த்து என்ன ஏது என விசாரிக்க நடந்த விஷயங்கள் தெரிய வருகிறது. காண்ட்ராக்ட் கேன்சலாக ராதிகா தான் காரணம் என தெரியவர பிறகு மீண்டும் ராதிகா வீட்டுக்கு வரும் கோபியின் அப்பா காண்ட்ராக்ட கேன்சல் பண்ணது நீதானா என கேட்க ராதிகா ஆமாம் என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.

சாப்பாடு நல்லா இல்லன்னா அதை நான் தான் பேஸ் பண்ணனும் அதனால தான் பெரிய கேட்டரிங் போகலாம்னு முடிவெடுத்தேன் என சொல்கிறார். கோபி நான் கூட வேணாம்னு தான் சொன்னேன் ராதிகா பொழச்சி போகட்டும் நான் ஆர்டரை கொடுக்கிறேன் என சொன்னா என சொல்ல தாத்தா அப்போ நீங்க ரெண்டு பேரும் திட்டம் போட்டு தான் இதை கேன்சல் பண்ணி இருக்கீங்க என கோபப்படுகிறார். பாக்கியா இதுக்கெல்லாம் அப்படியே மூளையில முடங்கிட மாட்டா அவளை உங்களால ஒன்னும் பண்ண முடியாது என சவால் விடுகிறார்.

அடுத்து பாக்யா ராஜசேகரை சந்தித்து பணத்தை திருப்பி தந்து விடுகிறேன் என சொல்ல அப்படி எல்லாம் தர முடியாது மாச மாசம் தான் வட்டி கட்ட முடியும் என கறாராக கூறிவிடுகிறார். இதனால் பாக்கியா வருத்தத்தோடு அங்கிருந்து கிளம்பி வருகிறார்.

பிறகு வீட்டில் சந்தோஷமாக ஈஸ்வரியிடம் பேசிக் கொண்டிருந்த எழில் சிறிது நேரத்தில் அமிர்தாவுக்கு போன் போட அவர் எடுக்காத காரணத்தினால் முகம் சோகமாகி அங்கிருந்து நகர்ந்து செல்ல செழியன் போனை எடுத்து பார்த்து அமிர்தாவுக்கு தான் போன் பண்ணி இருக்கான் என சொல்ல ஈஸ்வரி கோபப்படுகிறார். நான் உயிரோட இருக்கும் வரை அவங்க ரெண்டு பேரையும் சேர விட மாட்டேன் என சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.