இனியாவுக்கு வீடு விற்கப்படும் உண்மை தெரிய வர கோபி பதில் சொல்ல முடியாமல் சிக்கி திணறியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் தயாரிப்பாளர் இரண்டு கதையையும் வாங்கிக் கொள்வதாக சொல்லி நாளைக்கு வாங்க எவ்வளவு என்ன ஏது என்பதை பேசிக்கொள்ளலாம் என சொல்லி அனுப்புகிறார்.
வீட்டில் எல்லோரும் கோபி வீடு விற்கும் விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருக்க அப்போது வரும் எழில் இந்த வீட்ட நாம வாங்க தான் போறோம் என சொல்ல அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். அதன் பிறகு தன்னுடைய இரண்டு கதையை ஒரு தயாரிப்பாளர் நல்ல விலைக்கு வாங்கிக் கொள்வதாக சொல்லி இருப்பதாக சொல்கிறான். இதனால் எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.
இந்த பக்கம் வீட்டில் ராதிகா சாப்பிட கூப்பிட இனியா படிப்பிற்காக படித்து முடித்ததும் சாப்பிடலாம் என கோபி சொல்ல எனக்கு பசிக்குது என ராதிகா கோபியை பார்த்து முறைத்ததும் எனக்கும் லைட்டா பசிக்குது இனியா வா டைமுக்கு சாப்பிடலாம் என சொல்லி கூப்பிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் தாத்தா ராமமூர்த்தி சிரித்துக் கொண்டே என்ட்ரி கொடுக்கிறார்.
அதன் பிறகு நீ வீடு விக்கிறனு சொன்னதும் அவங்க எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துருவாங்கன்னு நினைச்சியா அந்த வீட்டை வாங்க போறான் என சொல்ல எனது வீட்டை வைக்க போறாங்களா என இனியா கேட்க கோபி பதில் சொல்ல முடியாமல் தடுமாறுகிறார். ஆமா உன் அப்பன் தான் வீட்டை வைக்கப் போறேனு, வீட்ல இருக்க எல்லாரையும் வெளியே போக சொல்லிட்டான் என சொல்ல இனியா ஏன் டாடி என கேட்க கோபி என் பேர் எப்படி தூக்கி எறியலாம் அதனாலதான் இப்படி பண்ணேன் என சொல்ல தாத்தா ஸ்கூல் பிள்ளை மாதிரி பேசாத என திட்டுகிறார்.
பிறகு எழில் வீட்டை வாங்க போவதாக சொல்ல நடக்கிறது பேசுங்க கனவு காணாதீர்கள் என கோபி சொல்லிவிட்டு சாப்பிட சென்று விடுகிறார். அடுத்து பாக்யா வீட்டிற்கு வரும் சதீஷ் கதையை விக்கிறது நல்லதில்ல என சொல்ல பாக்கியா வேண்டாம் என சொல்ல எழில் எதையும் நல்லதா நினைச்சு செய்தால் நல்லதா நடக்கும் நீதானே சொல்லி இருக்க நான் பாத்துக்குறேன் என கதையை விற்க கிளம்பி செல்கிறார்.
அதன் பிறகு ஜெனி செழியனிடம் வீட்டை வாங்க உதவி செய்ய சொல்லி பேச செழியன் முடியாது என சண்டையிட பிறகு பாக்யா ஈஸ்வரி என இருவரும் வந்துவிட செழியன் இந்த வீட்டை அப்பா வைக்க போறேன்னு சொல்லிட்டாரு அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? என கேட்க பாக்கியா பதில் சொல்ல முடியாமல் நிற்கிறார்.