சாப்பாடு டெலிவரிக்காக ஆசிரமத்திற்கு வர இருந்த பாக்கியாவை தடுத்து நிறுத்தியுள்ளார் கோபி.

Baakiyalakshmi Episode Update 12.04.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் வீட்டிற்கு வரும் கோபி தனது அம்மாவிடம் பாக்கியா எங்கே என கேட்கிறார். அவ சமைக்கும் இடத்தில் இருக்கிறார் என சொல்ல எந்த நேரமும் சமைக்கும் இடத்திலேயே இருந்தால் வீட்டில் சமையல் யார் செய்தது என கோபி கேட்டுக் கொண்டிருக்க அந்த நேரத்தில் பாக்யா கரெக்டாக வந்து விடுகிறார்.

வீட்டுக்கு வந்த பாக்கியாவிடம் சமைக்கிற இடத்திலேயே இருந்தால் வீட்டில் எல்லா வேலையும் பண்ணுவா பாக்கியா என கேட்கிறார். வீட்ல இருக்கவங்களுக்கும் சமைத்து எடுத்து வந்துவிட்டேன் என பாக்கியா கூறுகிறார். பிறகு பாக்கியா அத்தை நான் சாப்பாடு டெலிவரி பண்ணிட்டு வந்துடறேன் என சொல்ல ஈஸ்வரி சரியென சொல்லி அனுப்புகிறார். கோபி எங்க போற அதெல்லாம் போக வேண்டாம் நான் முக்கியமான டாக்டர் ஒருத்தர்கிட்ட அப்பாவுக்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருக்கிறேன் என்று சொல்கிறார். அப்பாவை கூட்டிட்டு ஹாஸ்பிடலுக்கு போயிட்டு வா என சொல்கிறார். நான் சீக்கிரமா சாப்பாடு கொடுத்து விட்டு வந்து விடுகிறேன் என பாக்கியா சொல்ல உனக்கு சாப்பாடுதான் முக்கியமாப் வேற யாரையாவது கொடுத்து விட சொல்லு என சொல்ல பாக்கியாவும் சரி என கூறுகிறார்.

இந்த பக்கம் எழிலுடன் அவருடைய தோழி அடுத்தடுத்து பேசுவதை பார்த்து அமிர்தா செம கடுப்பாகிறார். சதீஷிடம் அவ எதுக்கு அடிச்சு அடிச்சு பேசுறா, மச்சி சூப்பர்ரா இதெல்லாம் நல்லாவா இருக்கு என புலம்புகிறார். பிறகு சதீஷ் என்னிடம் அமிர்தாவுக்கு உன்மேல 100% காதல் இருக்கு. ஜானு இருக்கறது அவங்களுக்கு சுத்தமா புடிக்கல அதை சொல்லவும் முடியல எனக் கூறுகிறார். பிறகு எழில் அமிர்தாவுக்கு தெரியாமல் அவர் புலம்புவதை கேட்கிறார்.

இந்தப் பக்கம் கோபி ராதிகாவுடன் ஆசிரமத்திற்கு வருகிறார். டீச்சர் இன்னைக்கு வருவாங்க கண்டிப்பா நீங்க மீட் பண்ணனும் எஸ்கேப் ஆக கூடாது என ராதிகா சொல்கிறார். வரட்டும் எனக்கென்ன பயம் மீட் பண்றேன் கோபி தைரியமாக சொல்ல அந்த நேரத்தில் ஆட்டோவில் செல்வி வந்து இறங்குகிறார். இதைப் பார்த்த போது ராதிகாவை நைசாக அழைத்துச் சென்று உள்ளே சென்று விடுகிறார். அங்கே பணிபுரியும் ஒருவரிடம் அந்த சமையல் செய்து உங்களை உள்ள விடாதீர்கள் என சொல்லி செல்வியை தடுத்து நிறுத்தி அனுப்பிவிடுகிறார்.

இந்த பக்கம் பாக்கியா மாமனாரை கூட்டி சென்று வீட்டிற்கு வருகிறார். புதுசா ஒண்ணும் சொல்லல அதையே டாக்டர் சொன்னதை தான் இவரும் சொல்கிறார் எதுக்கு இப்படி அவசரஅவசரமாக அனுப்பினார் என ஈஸ்வரி புலம்புகிறார். பிறகு ஈஸ்வரி பாக்கியாவை ராதிகா பார்க்க அனுப்பாமல் தடுப்பதை சொல்ல கோபியின் அப்பா விஷயத்தைப் புரிந்து கொள்கிறார். செல்வி வந்தது ராதிகா கட்டிக்கப்போறவங்களை நீ பார்த்தயா என கேட்க செல்வி இல்லை என கூறுகிறார். இதனையடுத்து கோபியின் அப்பா இதுக்குத்தான் எங்களை அவசரஅவசரமாக ஹாஸ்பிடலுக்கு அனுப்பி இருக்கான் என புரிந்து கொள்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.