மயூவை பிடித்து தள்ளியை இனியாவால் கோபிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் ராதிகா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோபி வந்தது உங்களால எங்களுக்கு ஒரே பிரச்சனை தான் என சொல்ல என்னாச்சு எனக்கு கோபி கேட்க இனியா தன்னைப் பிடித்து தள்ளிய விஷயத்தை கூறுகிறார் மயூ. இனியா அப்படி செய்யற பொண்ணு இல்லை என கோபி சொல்ல அப்போ மயூ பொய் சொல்றாங்க சொல்றீங்களா என சத்தம் போடுகிறார் ராதிகா. எங்க ரெண்டு பேர் நிம்மதியை கெடுக்கணும்னு கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி இருக்கு என சொல்லி கதவை சாத்தி உள்ளே சென்று விடுகிறார். இதனால் கோபி அரேஞ்ச் மேரேஜ் சரியில்ல லவ் மேரேஜ் சரியில்ல என புலம்புகிறார்.

இந்த பக்கம் வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக சிரித்து பேசிக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டு இருக்க அப்போது ஈஸ்வரி வர்ஷினி வந்து போன விஷயத்தைப் பற்றி சொல்ல எலி ஷாக் ஆகிறான். அந்தப் பொண்ணு ரொம்ப அடக்க ஒடக்கமா அமைதியா இருக்கா அமிர்தானாலும் அடக்கமா இருக்கிற மாதிரி நடிப்பா. இந்த பொண்ணு அப்படி இல்ல என ஈஸ்வரி புகழ்ந்து பேச எழில் டென்ஷன் ஆகிறார்.

அடுத்ததாக அமிர்தா வீட்டில் அவரது அப்பா அம்மா குழந்தையோடு விளையாடிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் வர்ஷினி வீட்டுக்கு வந்து கிப்ட் கொடுத்து எல்லோரிடமும் அறிமுகம் ஆகி பின்னர் பற்றி பேச எழிலும் எங்கள அப்பா அம்மானு தான் கூப்பிடுவார் என சொல்கின்றனர். அப்படின்னு நான் உங்கள அத்த மாமா என்று தான் கூப்பிடனும் என சொல்ல அமுதாவின் அப்பா இப்ப நீ என்ன சொன்னோமா என திருப்பி கேட்கிறேன் நானும் கல்யாணம் பண்ணிக்க போறோம் அவங்க வீட்ல எல்லோருக்கும் என்னை பிடிச்சிருக்கு. எனக்கும் அவங்க குடும்பத்துல எல்லாரையும் பிடிச்சிருக்கு அப்பா கிட்டையும் பேசி ஓகே வாங்கிட்டேன் ரெண்டு பேரும் ஒக்காந்து பேசி மாப்பிள்ளை பார்க்க வேண்டியது தான் பாக்கி என சொல்ல அதுக்கு வாய்ப்பே இல்லை என அமிர்தா கூறுகிறார்.

ஏன் நீங்க கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சீங்களா அவங்களும் அப்படி நினைக்கணும் இல்ல என சொல்ல அவரது அப்பா அம்மா அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு வர்ஷினி வெளியே போனதும் அப்படி இருக்க வாய்ப்பில்லை என அமிர்தா அவர்களுக்கு சொல்ல முயற்சி செய்தும் அவர்கள் அதை கேட்காமல் உள்ளே சென்று விடுகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.