ஜெனியின் சந்தேகத்தால் படாத பாடுபடுகிறார் செழியன். 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் செழியன் லேட்டாக வந்ததால் ஜெனி கோபத்தில் மேலே சென்ற நிலையில் மேலே போன செழியனை பிடித்து கேள்வி கேட்கிறார். லேட் ஆகும்னா ஒரு போன் பண்ணி சொல்ல மாட்டியா உண்மையாகவே ஆபீஸ்ல தான் இருந்தியா? இல்ல யாரையாவது பார்க்க வெளியே போயிட்டு வரியா என்று கேள்வி கேட்க செழியன் ஒரு வழியாக சமாளிக்கிறார். 

அடுத்ததாக எல்லோரும் சாப்பிட உட்கார சப்பாத்தி சிக்கன் கிரேவி, சிக்கன் 65, பன்னீர் மசாலா என விதவிதமாக சமைத்து எல்லோரையும் சாப்பிட வைக்கிறார் பாக்யா. ராதிகா மயூவை பார்க்க சென்றிருக்க சோபாவில் உட்கார்ந்து இருக்கும் கோபி சப்பாத்தி சிக்கன் 65 சிக்கன் கிரேவி என விதவிதமாக சாப்பிடுவதை பார்த்து எச்சி ஊர வேடிக்கை பார்க்கிறார். 

இனியா லெக் பீஸ் வேண்டும் என கேட்டு வாங்கி சாப்பிட கோபி டாடி பாவம் டா என புலம்புகிறார். இந்த நேரத்தில் வீட்டுக்கு வரும் ராதிகா மயூ அவ கூட சாப்பிடலன்னு ஆசைப்பட்டா அதான் அங்கேயே சாப்பிட்டு வந்துட்டேன். உங்களுக்கும் கொண்டு வந்திருக்கிறேன் என்று சொல்ல கோபி பேக்ஸை வாங்கி மோப்பம் பிடித்து மசாலா வாசனை வருது ஓட்ஸ் இல்ல என சந்தோஷப்படுகிறார்.

ராதிகா பவுல் எடுத்து வந்து பேக்சை ஓபன் பண்ணு கோபி என்ன சமையல் என்று கேட்க மசாலா ஓட்ஸ் என ஷாக் கொடுக்கிறார். ராமமூர்த்தி கோபியை வெறுப்பேற்றுக் கொண்டே சாப்பிடுகிறார். பாக்யா நாளைக்கு பழனிச்சாமி சாருக்கு பிறந்தநாள் என்பதால் ஸ்வீட் செஞ்சிருக்கேன் என்று சொல்லி கொடுக்க இதைப் பார்த்து அவருக்கு பிறந்தநாள்னா இவ எதுக்கு ஸ்வீட் பண்ணனும் என கோபி பொறந்த அடுத்த வீட்டு விஷயத்துல எதுக்கு நீங்க மூக்கை நுழைக்கிறீங்க என ராதிகா கோபியை பிடித்து திட்டுகிறார். 

இது என்னுடைய குடும்பம் என்று கோபி சொல்ல இன்க்ளூடிங் பாக்யாவா என்று ராதிகா கேட்க இல்ல எக்ஸ்ளூடிங் பாக்யா என கோபி பதில் கொடுக்கிறார். உங்களுக்கு போய் சமைத்துக் கொண்டு வந்த பாரு என சாப்பிட்டுக் கொண்டிருந்த மசாலா ஒட்ஸை பிடுங்கி கொண்டு செல்கிறார். 

பிறகு செழியன் தூங்கியதும் ஜெனி அவரது ஃபோனை எடுத்து மெசேஜ்களை பார்த்து யாருக்கு ஒருவருக்கு டியர் என அனுப்பி இருப்பதால் செழியன் எழுப்பி யாருக்கு இந்த மெசேஜ் அனுப்பினேன் என கேள்வி கேட்க செழியன் அவ என்னுடைய பிரண்டு டன் என்பதற்கு பதிலா டியர் நான் அனுப்பிட்டு இருக்கேன் என்று சொல்ல ஜெனி அதை நம்ப மறுக்கிறார். 

நைட்டு இரண்டு மணிக்கு அந்த விஷ்ணுவுக்கு போன போடு என்று சொல்ல செழியன் காலையில போடுற என சொல்லி படுத்துக்குங்க ஜெனி காலை வரை தூங்காமல் இங்கு ஒன்றும் நடந்திருக்க செழியன் எழுந்ததும் முதல் வேலையாக போன் போட சொல்கிறார். செழியணும் போன் போட அவரது நண்பர் விஷ்ணு போனை எடுத்துப் பேச அதன் பிறகு நிம்மதியாகும் ஜெனி நான் கொஞ்ச நேரம் தூங்குறேன் நீ பாப்பா இருந்தா பாத்துக்கோ என படுத்துக் கொள்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.