எழில் எதிர்பாராத அதிர்ச்சி கொடுக்க கோபி வார்னிங் கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செழியன் ஜெனியை கூட்டி சென்று உட்கார வைக்க கோபி ராதிகாவை கூட்டிச் சென்று நலங்கு வைக்க எல்லோரும் அதிர்ச்சியாக பாக்யா கிச்சனுக்குள் சென்று விடுகிறார்.
அடுத்து ஜெனியின் அம்மா கிச்சனுக்கு சென்று இதையெல்லாம் பார்த்துட்டு எப்படி உங்களால இருக்க முடியாதுன்னு தெரியல என சொல்ல பாக்கியா வருத்தப்பட்டு நிற்கிறார். பிறகு இனியா பாக்கியாவிடம் பேச போக கோபி இனியா டைம் ஆயிடுச்சு கிளம்பலாம் என சொல்லி அழைத்துச் செல்கிறார்.
அதன் பிறகு கொரியர் பாய் வந்து லெட்டர் கொடுக்க கோபியை கேட்க எழில் அப்படி யாரும் இந்த வீட்டில் இல்லை என சொல்ல சுவத்துல நேம் போடு இருக்கு இல்லன்னு சொல்றீங்க என்ன சொல்ல எது இதோட அந்த பேர்ல வந்தா ரிட்டர்ன் போட்டுடுங்க இல்ல இங்க கொண்டு வராதீங்க என கூறுகிறார்.
பிறகு எல்லாம் இந்த நேம் போர்டு இருப்பதினால் தானே இப்படி பண்றாங்க என சொல்லி எழில் அந்த நேம் போட எடுக்கப் போக அப்போது தாத்தா வந்து இதை எதுக்கு பார்த்துட்டு எதுக்கு என கேட்க நடந்த விஷயத்தை சொல்கிறார். அப்போது கோபி காரில் வந்து இறங்க அந்த நேம் போர்டை தூக்கி வீச கோபி அதிர்ச்சி அடைகிறார்.
பிறகு கோபி எழிலிடம் வந்து எதுக்கு என்கூட தூக்கி வீசின இது என்னுடைய வீடு கழட்டுன உன் கையாலே இத நீ மாட்டணும் என சொல்ல எழில் முடியாது என கூறுகிறார். தாத்தா இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறார்.
அதன் பிறகு கோபி வீட்டில் அப்பாவிடம் இன்னும் அந்த வீடு என் பேர்ல தான் இருக்கு மறந்துடாதீங்க நான் நினைச்சா அந்த வீட்டுக்குள்ள வந்து பாக்யாவையும் எழிலையும் வீட்டை விட்டு வெளியே துரத்த முடியும் என எச்சரிக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.