பாக்கியாவை பார்க்க வந்துள்ளார் ராதிகா.
Baakiyalakshmi Episode Update 07.04.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. எழில் தமிழ் படம் பார்க்க வராதீங்க என்று சொன்னதை நினைத்து பாக்கியாவிடம் வருத்தப்பட்டு கண்கலங்கி பேசுகிறார் கோபி. இதனால் பாக்கியம் பண்ணது பெரிய தப்பு தான் அவனுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் மன்னிச்சிடுங்க என கண் கலங்குகிறார்.
பிறகு எல்லோரும் கிச்சனில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது எழில் வந்து பாக்கியாவிடம் பேசுகிறார். ஆனால் பாக்கியா எழிலிடம் பேச மறுக்கிறார். அவரிடம் பேசாமல் சென்று விடுகிறார். ஜெனி இனியா செல்வி என எல்லோர் சொல்லியும் பாக்கியா எழிலிடம் பேச மறுக்கிறார்.
அதன்பிறகு பாக்கியா சமைக்கும் இடத்திற்கு ராதிகா வருகை தருகிறார். அவரை வரவேற்று உட்கார வைக்கிறார் பாக்கியா. மயூரா பிறந்தநாளுக்கு அம்மா கொஞ்சம் பேருக்கு சாப்பாடு வாங்கி தரச் சொன்னாங்க, அவளோட பிறந்தநாள் முடிஞ்சு போச்சு. சரி இப்பயாச்சும் அதை பண்ணலாம்னு வந்திருக்கேன். பக்கத்துல ஒரு ஆதரவற்றோர் இல்லம் இருக்கு அங்க இருக்கிற 100 பசங்களுக்கு மதிய சாப்பாடு ரெடி பண்ணி தரணும். வியாழக்கிழமை எனும் முடியுமா எனக் கேட்க பாக்கியா பண்ணி கொடுக்கிறேன் என சொல்கிறார். பிறகு செல்வி எப்போ உங்களுக்கு கல்யாணம்? இங்கே கண்டதே காட்ட மாட்டீங்களா என கேள்வி கேட்கிறேன் நீங்கள் வந்தபோது அவர் இங்க தான் இருந்தார் ஆனால் போன்ல பேசிட்டு இருந்ததால் உங்களை பார்க்க முடியல என சொல்ல போட்டோ காட்டலாம்ல என செல்வி கேட்கிறார். இருங்க இருக்கானு பார்க்கிறேன் என ராதிகா போனில் தேட போட்டோ எதுவும் இல்லை என கூறுகிறார். போட்டோ எதுக்கு உங்களுக்கு நேர்லயே காட்டுவேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
அதன்பிறகு வீட்டில் எல்லோரும் அமர்ந்து கொண்டிருக்கும் போது எழில் வந்து இனியா ஜெனி இருவருக்கும் ஸ்வீட் கொடுத்து விட்டு பாக்கியாவிடம் பேச அவர் பேச மறுக்கிறார். யாருமே இல்லாம நீ பெரிய ஆள் ஆகிட்டியா?? அப்பா வேணாமா உனக்கு? அவர் கிட்ட மன்னிப்பு கேட்கத் தான் நான் பேசுவேன் என சொல்ல முடியாது என கூறி விடுகிறார்.
அதன்பிறகு தாத்தாவை வாக்கிங் கூட்டிச் சென்று அவரிடம் வருத்தப்பட்டு பேசுகிறார் எழில். வீட்டிற்கு அவரை கூட்டி வந்ததும் பாக்கியா கோபியிடம் மன்னிப்பு கேட்குமாறு சைகையில் கூறுகிறார். அதன்பிறகு கோபியிடம் உங்களை ஷோவுக்கு கூப்பிடாதது என்னுடைய தப்புதான். நான் எதும் கோபத்துல அப்படி பண்ணிட்டேன் தயவு செய்து என்னை மன்னிச்சுடுங்க என கையெடுத்து மன்னிப்பு கேட்கிறார். எதுக்கு கூப்பிடாம விடனும் எதுக்கு மன்னிப்பு கேட்கனும் என செழியன் கேட்கிறார். எல்லாம் என்னுடைய தப்புதான் என மீண்டும் எழில் மன்னிப்பு கேட்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.