Baakiyalakshmi Episode Update 05.04.22 : தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சிகிச்சை பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஜெனி எழிலுக்கு ஏதாவது வாங்கி கொடு என செழியன் இடம் சொல்ல செடிகள் ஒரு நிமிஷம் என அவர் வாங்கி வைத்திருந்த சர்ட்டை எடுத்து காண்பிக்கிறார். பிறகு எங்கள் வீட்டிற்கு வந்ததும் செழியன் ரூமிற்கு அழைத்துச் சென்று சாட்டை எடுத்து கொடுக்க செழியா நீயா இப்படி? தேங்க்ஸ் டா என நன்றி கூறுகிறார்.
அதன் பின்னர் எழில் பாக்கியாவை அழைத்துக்கொண்டு அமிர்தா வீட்டிற்குச் சென்று ஷோவிற்கு வருமாறு அழைக்கிறார். மறுநாள் காலையில் எல்லோரும் படம் பார்க்க வந்துவிட்டனர். ஆனால் கோபி மட்டும் வராததால் பாக்கியா வருத்தப்படுகிறார். ஈஸ்வரி எல்லா நாளும் அவனுக்கு வேலை அப்படி என்னதான் வேலை செய்கிறானோ எனத் திட்டுகிறார்.
படம் போடுவதற்கு முன்பாக எழில் எல்லோருக்கும் நன்றி தெரிவிக்கிறார். பின்னர் படத்தைப் பார்த்த எல்லோரும் படம் சூப்பராக இருக்கிறது என எழிலை பாராட்டுகின்றனர். படத்தின் தயாரிப்பாளர் எழிலை பாராட்டிப் பேசுகிறார். பிறகு பேசிய என் சினிமாவுக்கு எங்கள் குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை அப்படி இருக்கையில் சினிமா எடுக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. முதலில் நான் இதை வீட்டில் சொல்லும் போது எல்லோரும் பயந்தனர் என் அம்மா மட்டும் தான் அவன் ஜெயிப்பான் என என்னுடன் பக்கபலமாக நின்றார். படத்தில் எழுத்து இயக்கம் என என் பெயர் வந்திருந்தாலும் இது என் அம்மாவுடைய படம் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஜெயித்த படம் என பேசி அம்மாவை மேடைக்கு அழைத்து பேச வைக்கிறார்.
எழிலைப் பற்றி பெருமையாக பேசுகிறார் பாக்கியா. நீ ஜெயிச்சுட்டே என கண் கலங்குகிறார். இருவரும் கட்டி அணைத்து அன்பை பரிமாறிக்கொள்ள இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. அதன் பின்னர் வெளியான ப்ரோமோ வீடியோவில் ஈஸ்வரி கோபியுடன் படத்துக்கு ஏன் வரல எனக் கேட்க எழில் வர வேண்டாம் என சொல்லும் போது நான் எப்படி வரமுடியும் என கூறுகிறார். இந்த விஷயம் தெரிந்த பாக்கியா எழிலிடம் கோபித்துக் கொண்டு என்னிடம் பேசாத அப்பா வேண்டாவா என கோபப்படுகிறார். இந்த காட்சிகள் நாளை ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கலாம்.