கோபிக்கு ராதிகா எதிர்பாராத அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோபி இனியாவுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க அப்போது வரும் ராமமூர்த்தி இனிய டியூஷனுக்கு போறியா என கேட்க கோபி அதெல்லாம் வேண்டாம் என சொல்ல ஏன் வேண்டாம் பக்கத்துல ரெண்டு தெரு தள்ளி டியூஷன் சென்டர் இருக்கு, ராதிகாவும் அவர் 12th போறா அதுவும் நல்லது தான் என சொல்ல கோபி சரி என கூறுகிறார்.
பிறகு கோபி பீஸ் எவ்வளவு ஆச்சு எனக்கு ராமமூர்த்தி பன்னிரண்டாயிரம் என சொல்ல கோபி அதை எடுத்து வந்து கொடுக்க அப்படின்னா எடுத்துட்டு போய் பாக்யா கிட்ட குடு அவதான் பீஸ் கட்டி டியூஷன் சேர்த்து விட்டாள், என சொல்ல கோபி அவ கிட்ட கொடுத்திருங்க என சொல்லிக் கொடுக்க ராமமூர்த்தி அதை வாங்க மறுக்கிறார்.
அடுத்து பாக்கியா குடும்ப வரவு செலவு கணக்கு பார்த்துக் கொண்டிருக்க அப்போது ஜெனியிடம் செலவு அதிகம் என சொல்ல ஈஸ்வரி வந்து கோபி இருக்கிற வரைக்கும் வீட்டு கஷ்டமே தெரியல என இனிமேதான் அவனோட அருமை உனக்கு புரியும் என சொல்லிவிட்டு செல்கிறார்.
அடுத்ததாக எழில் ஈஸ்வரியிடம் சென்று பேச ஈஸ்வரி வர்ஷினியோட அப்பா கிட்ட போய் மன்னிப்பு கேட்டு அவர் என்ன சொல்றாரு அதுக்கு சரின்னு சொல்லி படம் பண்ற வேலையை பாரு என சொல்ல எடிட் அது மட்டும் நடக்காது நான் கண்டிப்பா படம் பண்ணுவேன் என சொல்லி வெளியே வருகிறார்.
அடுத்து கோபி மளிகை சாமான்களை வாங்கிக் கொண்டு தூக்க முடியாமல் தூக்கி வீட்டுக்கு வர அதை பார்த்து ராமமூர்த்தி கிண்டல் அடிக்கிறார். அடுத்து ராதிகா வீட்டுக்கு என்னென்ன செலவு இருக்கு எவ்வளவு செலவாகும் என கணக்கு பார்த்துக் கொண்டிருக்க கோபி வந்து என்ன என்று கேட்க வீட்டு வரவு செலவு கணக்கு என சொல்ல கோபி எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்கிறேன் நீ எவ்வளவு வேணும் என்பதை மட்டும் சொல்லு என கேட்க வீட்டு செலவுக்கு மட்டும் 50 ஆயிரம் ரூபாய் வேண்டும் என சொல்கிறார். இதைக் கேட்டு கோபி அதிர்ச்சி அடைகிறார்.
அந்த வீட்டில பத்தாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு என்னென்ன பேசுவ இப்போ ஐம்பதாயிரம் என ராமமூர்த்தி கிண்டல் அடிக்க அப்பா மெதுவா பேசுங்க ராதிகா காதுல விழுந்திட போது என கோபி பதற ஏன் பயமா இருக்கா இதுக்கு மேல தான் பயங்கரமா இருக்க போகுது என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.