கோபி பாக்கியாவுடன் கொஞ்சி குலாவ ராதிகா அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் குடும்பத்தார் எல்லோரும் ஜெனியின் குழந்தையை கொஞ்சிக் கொண்டு சந்தோஷமாக இருக்கின்றனர்.
மறுபக்கம் கணேஷ் அமிர்தாவின் ஐடி கார்டை எடுத்து வந்து அமிர்தா படித்த காலேஜ் வந்து அவருடைய அட்ரஸ் கேட்க கொடுக்க மறுக்கின்றனர். அந்த நேரம் பார்த்து அமிர்தாவுடன் படித்த பெண் அங்கு வர அவர் அமிர்தா போரூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள தெருவில் நாலாவது அல்லது ஐந்தாவது வீட்டில் இருக்கிறார் என்ற விஷயத்தை சொல்கிறார்.
மேலும் கணேஷ் அமிர்தாவின் போன் நம்பர் கிடைக்குமா என கேட்க நான் அமிர்தாவோட நம்பர் வாங்கி உங்களுக்கு அனுப்பி விடுகிறேன் என கணேஷின் போன் நம்பரை வாங்கிக் கொண்டு அந்த பெண் கிளம்புகிறார்.
இதைத்தொடர்ந்து இங்கே கோபி மற்றும் பாக்யா இருவரும் சேர்ந்து ஒன்றாக குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ஹாஸ்பிடலுக்கு வரும் ராதிகா இதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பிறகு பங்க்ஷனுக்கு போகணும் என சொல்லி கோபியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறார்.
வீட்டிற்கு வரும்போது காரில் நீங்களும் பாக்கியாவும் சேர்ந்து கொஞ்சிக் கொண்டிருந்ததை பற்றி பேசி கோபப்படுகிறார். கோபி தெரியாத்தனமா அப்படி பண்ணிட்டேன் என மன்னிப்பு கேட்கிறார். அடுத்து எழில் ஹாஸ்பிடல் வந்து பாப்பாவை பார்த்து கொஞ்சி விட்டு சாப்பாடு கொடுத்து விட்டு வீட்டுக்கு கிளம்ப ஜெனியின் அம்மாவும் வீட்டிற்கு கிளம்பி விடுகிறார்.
அதைத்தொடர்ந்து மாலினி செழியனுக்கு போன் போட்டு உடனே வாங்க நான் உங்கள பாக்கணும் உங்ககிட்ட பேசணும் என்று சொல்ல செடியின் எனக்கு குழந்தை பிறந்து இருக்கு என்று சொன்னதும் அதைக் கேட்டு மாலினி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.