மாரடைப்பால் பிரபல தயாரிப்பாளர் ராஜூ அவர்கள் மரணம் அடைந்திருப்பது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
B.A Raju Passes Away : தெலுங்கு சினிமா இண்டஸ்ரியில் இன்று எந்த புது செய்தியும் ஒரு பகிரப்படாது.. காரணம் டோலிவுட்டின் ஃபிலிம் நியூஸ் ராஜூ நேற்றிரவு ஹார்ட் அட்டாக்கில் காலமானது தான்.
கோலிவுட்டில் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் மாதிரி தெலுங்கு இண்டஸ்ட்ரியின் பழைய வரலாறுகளைத் தேடித் தேடி கலெக்ட் செய்து பொக்கிஷமாய் பாதுகாத்து வந்தவர் ராஜூ.,மேலும் கோலிவுட்டுக்கும் பாலமாக இருந்தவர். ஒரு பி ஆர் ஓ-வாக இருந்து புரொடியூசராக அவதாரம் எடுத்தவரிவர்..தெலுங்கு சினிமாவில் சகல நடிகர், நடிகைகளையும் தெரிந்து அவர்களின் வளர்ச்சிக்கு நிஜமாக உதவியவர்..
அதே சமயம் டோலிவுட் சினிமா ரிப்போர்ட்டர்கள் எந்தச் செய்தியை எந்நேரம் கேட்டாலும் உள்ளது உள்ளபடி வழங்கியவரிவர்.
அப்பேர்ப்பட்டவரின் திடீர் மரணத்தால் அதிர்ச்சிக்குள்ளான தெலுங்குப் பத்திரிகையாளர்கள் ராஜூ சாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றொரு நாள் எந்த சினிமா செய்தியையும் பகிர வேண்டாம் என்று முடிவெடுத்துகிறார்கள் என்பதும் அன்னாருக்கு அஞ்சலியாக #RIPSir என்றும் #RIPBaRajuGaru எனவும் மட்டுமே சொல்லி ட்விட்டரில் அஞ்சலி செலுத்தி ட்ரெண்டாக்கி வருகின்றனர்.