பாடகர் அரிஜித் மற்றும் அனிருத் இசை நிகழ்ச்சிகள் ரத்து; ஒத்திவைப்பு
அனிருத் இசைநிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பிரபல பின்னணிப் பாடகர் அரிஜித் சிங் ஏப்ரல் 27-ந்தேதி நாளை ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார். தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அனுதாபம் தெரிவிக்கும் விதமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அரிஜித் சிங்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறவிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால், டிக்கெட் வாங்கிய அனைவருக்கும் […]