நடிகர் சிவகுமார் குடும்பம் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை கோரி போலீசில் புகார்
நடிகர் சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து சமூக வலைதளத்தில் ஆதாரமற்ற மற்றும் அவதூறான கருத்துகளைப் பரப்பியதாகக் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் சார்பில் அளிக்கப்பட்டுள்ள அந்தப் புகார் மனுவில், சமீபத்தில் முகநூலில் வெளியான வீடியோ ஒன்றில் நடிகர் சிவகுமார், அவரது குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய சமூகப் பணிகள் குறித்து தனிப்பட்ட […]