Browsing tag

investigation

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு?

விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்.. கடந்த 2015-16-ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை விஜய் தாக்கல் செய்தபோது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை, விஜய் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, ‘புலி’ படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் […]

திருத்தணி சம்பவம் குறித்து, இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம்..

‘வடக்கன் என்கிற வெறுப்பு மனநிலையில் செயல்படுவது சமூக சீர்குலைவிற்கே வழிவகுக்கும். வடக்கன் என்ற மனநிலை மிகவும் ஆபத்தான போக்காகும்’ என திருத்தணி சம்பவம் குறித்து திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘திருவள்ளுர் மாவட்டம், திருத்தணியில் நடந்த மனிதமற்ற கொடூர செயலை கண்டு நெஞ்சம் பதறுகிறது. அண்மைக் காலமாகத் தமிழகத்தில் அதிகரித்துவரக் கூடிய போதைப் பொருள் கலாச்சாரத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சியாளர்களுடைய மெத்தனப் போக்கே இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கிய […]

தங்கக்கடத்தல் வழக்கில் நடிகை ரன்யாராவ்: கோர்ட் அதிரடி உத்தரவு..

துபாயில் இருந்து கடந்த மார்ச் மாதம் தங்கம் கடத்தி வந்ததாக நடிகை ரன்யா ராவை டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. விசாரணைக்கு பின்பு நடிகை ரன்யா ராவ் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அவரது காதலன் தருண் என்பவர் உள்பட மேலும் சிலர் இவ்வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார்கள். இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. வருவாய் நுண்ணறிவு பிரிவு […]

பாதிக்கப்பட்ட நடிகைக்கு நீதி கிடைக்கவில்லை: மஞ்சு வாரியார் ஆதங்கம்..

மலையாள சினிமாவில் பிரபல நடிகைக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தொடர்புடைய மற்ற 6 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடிகை மஞ்சு வாரியார் தெரிவிக்கையில், ‘நடிகையின் பாலியல் வழக்கில் குற்றம் செய்தவர்களுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது. அவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், அந்த செயலை திட்டமிட்டு செய்தவர்கள் சுதந்திரமாக வெளியே நடமாடி வருகின்றனர். ஆகவே, உரிய நீதி கிடைக்கவில்லை. எனவே, சதித் திட்டம் […]

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை: பிரபல நடிகை மேல்முறையீடு..

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே அத்தாணி பகுதியில், கடந்த 17.2.2017 அன்று பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து கேரவனில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் காரில் வந்த கும்பல் கேரவனை தடுத்து நிறுத்தி, அதன் உள்ளே அத்துமீறி நுழைந்தது. அங்கிருந்த நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது. இதுகுறித்து நடிகை அளித்த புகாரின் பேரில் மாநில குற்றப்புலன் விசாரணை பிரிவு போலீசார் விசாரித்து பல்சர் சுனில் என்கிற சுனில்குமார் என்பவர் உள்பட சிலரை போலீசார் […]

கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ படம் ரிலீஸ் ஒத்திவைப்பு..

கார்த்தி நடிப்பில் ‘மார்ஷல்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதற்கிடையில் உருவாவதாக இருந்த ‘கைதி-2’ படம் மேலும் தாமதமாகி உள்ளது. இது குறித்து இயக்குநர் லோகேஷ், கார்த்தி இருவரும் தெளிவான தகவல் தரவில்லை. இந்நிலையில், நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ படம் வருகிற 12-ந்தேதி திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இது குறித்து தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன், ‘எங்களை மீறிய சில எதிர்பாராத சூழ்நிலையால் ‘வா வாத்தியார்’ திட்டமிட்ட தேதியில் வெளியாகாது. இது மிகவும் […]

கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிட கோர்ட் தடை..

கடனை திரும்ப செலுத்தும்வரை நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கடனாக பெற்ற பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்றால் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள ‘வா வாத்தியார் திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா […]

கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிட கோர்ட் தடை..

கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘வா வாத்தியார்’ படத்தை ஸ்டுடியோ கிரின் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இத்திரைப்படம் வரும் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் கார்த்தி நடிப்பில் ‘மார்ஷல்’ என்ற படமும் உருவாகி வருகிறது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற சொத்தாட்சியர் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவர் திவாலானவர் என கடந்த 2014-ம் ஆண்டு அறிவித்து அவருடைய சொத்துகளை நிர்வகிக்க சொத்தாட்சியரையும் […]

வாட்ஸ்அப்பில் ஆள்மாறாட்டம்: நடிகை ரகுல் பிரீத் சிங் எச்சரிக்கை..

பிரபலங்களின் பெயரில் சிலர் போலி சமூக ஊடக கணக்குகளை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டு வருவது தொடர்கிறது. இது குறித்து புகார்களும் அளித்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில், நடிகை, ருக்மணி வசந்த், அதிதிராவ் மற்றும் ஸ்ரேயா சரண் ஆகியோரின் பெயரில் போலி கணக்குகளை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கு நடிகைகள் அது தங்களுடைய நம்பர் இல்லை, எனவும் அதை நம்ப வேண்டாம் எனவும் தெளிவுபடுத்தி இருந்தனர். இந்நிலையில் ரகுல் பிரீத் சிங் தனது எக்ஸ் பக்கத்தில், ‘தனது […]

பெண்கள் குறைதீர்ப்புக் குழு: திரைப்பட தொழிலாளர் சங்கம் கோரிக்கை..

பேச்​சிலர், மகா​ராஜா, கிங்​ஸ்​டன் உள்​ளிட்ட படங்​களில் நடித்​த திவ்யபார​தி, தற்போது தெலுங்​கில் ‘கோட்’ என்ற படத்​தில் நடித்துள்​ளார். நரேஷ் குப்பிலி இயக்கிய இதன் படப்​பிடிப்​பில், தன்னை பலமுறை அவர் அவமானப்​படுத்​தி​ய​தாக சில நாட்களுக்கு முன் குற்றம் சாட்டியிருந்​தார். நரேஷ் குப்​பி​லியின் எக்ஸ் தளப் பதிவை டேக் செய்​திருந்த திவ்யபார​தி, ‘பெண்களை ‘சிலகா’ (பறவை) போன்ற வார்த்தைகளால் அழைப்​பது நகைச்சுவை அல்ல. அது பெண் வெறுப்​பின் பிர​திபலிப்​பு​தான். இது​போல ஒரு முறை மட்​டுமல்ல, படப்​பிடிப்பிலும் அந்த இயக்குநர் பெண்​களை […]