Browsing tag

government

சிறந்த நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி, தனுஷ்: தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிப்பு..

2016-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் மற்றும் 2014-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளை பிப்ரவரி 13ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கிச் சிறப்பிக்கிறார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசின் சார்பில், சமுதாயச் சிந்தனைகளுடன் கூடிய மனித நல்லுணர்வுகளைப் பிரதிபலிக்கும் திரைப்படங்களை ஊக்கப்படுத்தும் வகையில், சிறந்த தமிழ்த் திரைப்படங்கள், […]

‘பார்டர்-2’ திரைப்படத்திற்கு, ஐக்கிய அரபு அமீரகத்தில் தடை..

விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் வெளியீடு தொடர்பாக தடைகளை சந்தித்து வருகிறது. இது பற்றிய வழக்கு விசாரணையில் நீதிமன்ற தீர்ப்பு நாளை மறுநாள் 27-ந்தேதி வெளியாகிறது. இதனை படக்குழு மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் நிகழ்ந்த ஒரு திரைப்படத்தின் நிலையை பார்ப்போம்.. இயக்​குநர் ஜே.பி.தத்தா இயக்​கத்​தில் 1997-ம் ஆண்டு வெளி​யான இந்தி திரைப்​படம் ‘பார்டர்’. 1971-ம் ஆண்டு நடந்த இந்​தி​யா- பாகிஸ்​தான் போர் பின்னணியில் உருவான திரைப்​படம் இது. […]

தமிழக அரசுக்கு நன்றி: சாய்பல்லவி நெகிழ்ச்சி

மலையாள சினிமாவில் ‘பிரேமம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இப்படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் சாய் பல்லவி நடித்த ‘மலர் டீச்சர்’ கதாபாத்திரம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. முதல் படத்திலேயே சாய் பல்லவிக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை தொடர்ந்து, தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. சாய் பல்லவி நடிப்பில் இறுதியாக வெளியான அமரன், தண்டேல் ஆகிய இரு படங்களும் […]

‘பிக்பாஸ்’ ஸ்டுடியோவை மூட, அரசு அதிரடி உத்தரவு..

மனித உணர்வுகளை சீண்டும் கேம்ஷோவாக பிக்பாஸ் அமைந்துள்ளது. இது தனிமனித சுதந்திரத்தை பறிக்கிறது. இருப்பினும் பணத்திற்காகவும் மேலும், பிரபலம் ஆவதற்காகவும் இத்தகைய ஷோக்கள் பல மாநிலங்களில் தொடர்கின்றன. பார்வையாளர்களுக்கு வேடிக்கையாய் பொழுது போகிறது. இது சரியா தவறா என்பதும் விவாதத்திற்கு உரியதாகிறது. இவ்வாறு தமிழ், கன்னடா, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் நடைபெறும் ’பிக்பாஸ்’ எனப்படும் ’ரியாலிட்டி ஷோ’ நிகழ்ச்சியில் முன்னணி நடிகர், நடிகைகள், வலைதள பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர். இதனிடையே, கர்நாடகாவிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் […]

முரசொலியில் எழுதிய கலைஞரின் வாசகம்: இயக்குநர் லிங்குசாமி நெகிழ்ச்சிப் பேச்சு..

கலைஞரின் எழுதிய வாசகம் குறித்து லிங்குசாமி நெகிழ்ச்சியுடன் மகிழ்ந்துள்ளார். இது பற்றிய அவரது அறிக்கை பார்ப்போம்.. தமிழக அரசு சார்பில் 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. அதில் 2021-ம் ஆண்டுக்கான இயக்குநருக்கான கலைமாமணி விருது பெறவுள்ளார் லிங்குசாமி. இந்த விருது வென்றது குறித்து லிங்குசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘தமிழக அரசு சார்பில் எனக்கு கலைமாமணி விருது அறிவித்திருக்கிறார்கள். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. முன்பு முரசொலியில் கலைஞர், கலைமாமணி […]

திரைப்பட கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் அறிவிப்பு; முழு விவரம்..

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருது, பல ஆண்டுகளாக இயல், இசை, நாடகக் கலைக்கு சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பைப் பாராட்டி வழங்கப்படுகிறது. கடந்த 2021, 2022, 2023 என மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது, திரைத் துறையைப் பொறுத்தவரையில், நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், பாடகி ஸ்வேதா மோகன், பாடலாசிரியர் […]

என்ன சொல்வதென்றே தெரியவில்லை: இளையராஜா நெகிழ்ச்சி..

இசைஞானி இளையராஜா​வின் இசைப் பயணத்​தின் பொன்​விழா ஆண்டை முன்​னிட்​டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இளையராஜா பல்​வேறு மொழிகளில் 1,500-க்கும் மேற்​பட்ட திரைப்​படங்​களில், 8,500-க்​கும் மேற்பட்ட பாடல்​களுக்கு இசையமைத்​துள்​ளார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜா​வின் இசைப்​பயணம் இந்த ஆண்​டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்​கிறது. இதை முன்னிட்டு தமிழக அரசு அவருக்கு பாராட்டு விழாவை நடத்தியது. இதில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல பிரபலங்களும், தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி […]

மத்திய அரசு கடுமையான தண்டனையை கொடுக்க வேண்டும்: ரஜினிகாந்த் ஆவேசம்

‘கனவிலும் அவர்கள் நினைக்கக் கூடாது’ என ரஜினிகாந்த் ஆவேசமாக தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல்கள் காண்போம்.. காஷ்மீரின் பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும், 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த கொடூரம் நாட்டையே அதிர்ச்சி அடையத் செய்துள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து, பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது இந்தியா. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, அரசியல் தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். […]

பிராமணர்களே, நிபந்தனையுடன் மன்னிப்பு கேட்கிறேன்: இயக்குனர் அனுராக் காஷ்யப் சர்ச்சை பேச்சு..

பிராமணர்கள் பற்றிய சர்ச்சை பேச்சுக்கு அனுராக் மன்னிப்பு கேட்டிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. பாலிவுட் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப், தனது வலைப்பக்கத்தில், ‘பஞ்சாப் 95, தடக் 2 மற்றும் புலே போன்ற படங்களைத் தடை செய்ததற்காக தணிக்கைக்குழு மற்றும் மத்திய அரசை கடுமையாக சாடி பதிவு ஒன்றை போட்டிருந்தார். சமூகத்தில் நடக்கும் அவலங்களை காட்டும் ‘பஞ்சாப் 95’, ‘டீஸ்’, ‘தடக் 2’ போன்ற பிற படங்களும் தணிக்கை […]

இயக்குனர் அனுராக் காஷ்யப் வெளியிட்ட கடுமையான பதிவு: சர்ச்சையாகி பரவுகிறது

பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் தனது வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள தகவல் சர்ச்சையாகி உள்ளது. அவர், வெளியிட்டுள்ள பதிவில், பஞ்சாப் 95, தடக் 2 மற்றும் புலே போன்ற படங்களைத் தடை செய்ததற்காக தணிக்கைக்குழு மற்றும் மத்திய அரசை கடுமையாக சாடி பதிவிட்டுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அனுராக் காஷ்யப், ‘நான் வாழ்வில் செய்த முதல் நாடகம் ஜோதிபா மற்றும் சாவித்ரிபாய் ஃபுலே பற்றியது. சாதியை எதிர்த்துப் போராடிய அவர்களுக்கு இந்த நாட்டில் இடமில்லையா? வெட்கப்படுகிறார்களா, […]