திருக்கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் நியமனம்!
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பராமரிக்கப்படும் திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமிப்பதற்கான தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்து, பெயர்ப்பட்டியலை தயாரிக்கும் குழுவில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் நிர்வாக இயக்குநர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் பிரபல பாடகர் வேல்முருகன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு அர்ச்சனா கல்பாத்தி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த […]