எங்களுக்கு வந்த கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது: நடிகை பூர்ணிமா ஃபீலிங்ஸ்..
கே.பாக்யராஜின் மனைவி நடிகை பூர்ணிமா கூறிய துயர வார்த்தைகள் அறிவோம். ‘திரைக்கதை மன்னர்’ இயக்குனர் கே.பாக்யராஜின் முதல் மனைவி உடல்நலக் குறைவால் உயிரிழந்து விட்டார். அதனையடுத்து, நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பாக்யராஜ். அவர்களுக்கு சாந்தனு என்ற மகனும், சரண்யா என்ற மகளும் இருக்கிறார்கள். சாந்தனு, தமிழ் சினிமா நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். சரண்யா அப்பா(கே.பாக்யராஜ்) இயக்கிய ‘பாரிஜாதம்’ படத்தில் மட்டும் நடித்திருந்தார். பின்னர், காதல் திருமணம் செய்து, தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக உள்ளார். […]