நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல்: கைதான தொழிலதிபருக்கு ஜாமீன்..
நடிகை ஹனிரோஸ் கொடுத்த பாலியல் புகாரில் கைதான தொழிலதிபருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு: மலையாள நடிகை ஹனிரோஸ் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் புகாரில் கைதாகி நீதிமன்றக் காவலில் இருக்கும் கேரள தொழிலதிபர் பாபி செம்மனூருக்கு, அம்மாநில உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், உருவக்கேலிக்கு எதிராக கடும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பான வழக்கினை விசாரித்த வந்த உயர்நீதிமன்ற நீதிபதி, ‘நமது சமூகத்தில் உருவக்கேலி என்பது ஏற்றுக் கொள்ளப்படாதது. ஒருவரின் உடல் […]