Browsing tag

ராஜமவுலி

அதிக பவுன்சர்களுடன் வர காரணம் என்ன?: ப்ரியங்கா சோப்ரா விளக்கம்..

ஹாலிவுட் படங்​களில் கவனம் செலுத்தி வரும் பிரி​யங்கா சோப்​ரா, ராஜமவுலி இயக்​கும் ‘வாரணாசி’ படத்​தில் நடித்து வரு​கிறார். இப்படத்தில் மகேஷ்​பாபு ஹீரோ​வாக நடிக்​கிறார். பிருத்​வி​ராஜ் நெகட்​டிவ் கதா​பாத்​திரத்​தில் நடிக்​கின்​றார். இப்​படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 7-ந்தேதி வெளி​யாக இருக்​கிறது. இந்​நிலை​யில் பிரி​யங்கா சோப்​ரா தற்போது அதிக பவுன்​சர்​களு​டன் வெளி​யில் வரு​கிறார். சமீபத்​தில் கோல்​டன் குளோப் விருதுக்​குச் சென்ற போதும் ஏராள​மான பவுன்​சர்​களு​டன் வந்​தார். ஏன் இந்த திடீர் மாற்​றம் என்​பது பற்றித் தெரிவிக்கையில், ‘யா​ராவது என்னை அணுகி […]

தீபிகா படுகோன் இல்லன்னா பிரியங்கா சோப்ரா: கல்கி-2 படக்குழு முடிவு..

பாலிவுட் சினிமாவில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப்பச்சன், கமல்ஹாசன் உள்பட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கல்கி 2898 ஏடி’. வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அக்கதை இன்னும் முடியவில்லை, விரைவில் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதன் 2-ம் பாகத்தின் படப்பிடிப்புக்காக, தீபிகா படுகோன் தேதிகளுக்காக அணுகியபோது பிரச்சினை உருவானது. 8 மணி நேரம் மட்டுமே நடிப்பேன் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிகளை கூறியிருந்தார். இதற்கு […]

ராஜமவுலியின் ‘வாரணாசி’ படப்பாடல்கள்: இசையமைப்பாளர் அப்டேட்ஸ்..

பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். ஆகிய பிரம்மாண்ட வெற்றிப் படங்களை கொடுத்த ராஜமவுலியின் இயக்கத்தில், மகேஷ்பாபு நடிக்கும் படம் ‘வாரணாசி’. இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையில் உருவாகும் இப்படத்தில், பிருத்விராஜ் சுகுமாறன், பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில், கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் கீரவாணி படம் குறித்து தெரிவிக்கையில், ‘ரசிகர்கள் பிரமாண்டத்தை […]

ராஜமவுலியின் சர்ச்சை பேச்சுக்கு, ராம் கோபால் வர்மா ஆதரவு..

பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, தற்போது ராஜமவுலி-மகேஷ்பாபு கூட்டணியில் ‘வாரணாசி’ என்ற படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் டைட்டில் , பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த வெளியீட்டு நிகழ்வில் ராஜமவுலி பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தியது. படத்தின் பெயர்-டீசரை அகண்ட திரையில் வெளியிட முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், குழப்பங்கள் எழுந்ததும் மேடையில் ஏறிய ராஜமவுலி, ‘எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், […]

ராஜமவுலி இயக்கும் ‘வாரணாசி’ படத்தலைப்புக்கு நேர்ந்த சிக்கல்..

இந்திய அளவில் புகழ்பெற்ற பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு தற்போது‘வாரணாசி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தலைப்பையும் அது தொடர்பான அறிமுக டீசரையும் படக்குழு அண்மையில் ‘குளோப்டிரோட்டர்’ என்ற பிரம்மாண்ட நிகழ்வில் வெளியிட்டது. இதனையடுத்து, இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிகழ்வில், அனுமன் குறித்து ராஜமவுலி பேசியது சர்ச்சையாகி, அவர் மீது ஹைதராபாத் காவல்துறையில் புகாரளிக்கப்பட்ட நிலையில், தற்போது ‘வாரணாசி’ படத்துக்கு புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. இந்த தலைப்பை […]

இயக்குநர் ராஜமவுலி மீது, இந்து அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார்..

இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநரான ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் ‘வாரணாசி’ படத்துக்காக ‘குளோப் டிரோட்​டர்’ என்ற சாகச உலகத்​தைப் படக்​குழு உருவாக்​கி​யுள்​ளது. இதற்​கான விழாவை ஹைதரா​பாத்​தில் ஏற்பாடு செய்தது படக்குழு. இந்த நிகழ்வில் படத்தின் தலைப்பையும் அது தொடர்பான அறிமுக டீசரையும் படக்குழு வெளியிட்டது. இந்த நிகழ்வில் பேசிய ராஜமவுலி, ‘எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை. என் அப்பா அனுமன் நமக்கு பின்னால் இருந்து அனைத்தையும் கவனித்துக்கொள்வார் என்றார். அவர் இப்படித்தான் […]

எனது குடும்பத்தில் டிஜிட்டல் கைது நடந்துள்ளது: நாகார்ஜுனா பரபரப்பு பேச்சு..

ரஜினி நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ படத்தில் ஸ்டைலிஸ்ட் வில்லனாக நாகார்ஜுனா நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில், தற்போது ஐதராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் தலைமையில் ஒரு ஊடக சந்திப்பு நடைபெற்றது. இதில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, எஸ்.எஸ். ராஜமவுலி, தில் ராஜு, சுரேஷ்பாபு போன்ற பல பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில், பேசிய நாகார்ஜுனா, ‘தனது குடும்பத்தில் ஒருவர் 6 மாதங்களுக்கு முன்பு 2 நாட்கள் டிஜிட்டல் கைதுக்கு ஆளானதாக கூறினார். காவல்துறையினரை அணுகினால் பிரச்சினை […]

ராஜமவுலி சர்ச்சைப் பேச்சு; விளக்கம் தருவாரோ?

பாகுபலி, ஆர்​ஆர்​ஆர் படங்களின் மாபெரும் வெற்​றிக்​குப் பிறகு, மகேஷ்​பாபு நடிக்​கும் ‘வாரணாசி’ என்ற படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. மகேஷ்பாபு​வின் கேரக்டரை ஹனுமனை நினை​வூட்​டும் வகையில் வடிவமைத்துள்​ள​தாக ராஜமவுலி​யின் தந்தை விஜயேந்​திர பிர​சாத் கூறி​யிருந்​தார். இதற்​கிடையே பிரியங்கா சோப்ரா ‘மந்தாகினி’ என்ற கதாபாத்​திரத்​தி​லும் பிருத்​வி ராஜ் ‘கும்பா’ என்ற கதாபாத்திரத்திலும் நடிக்​கின்​றனர். அவர்​களின் முதல் தோற்ற போஸ்​டர் வெளி​யிடப்​பட்ட நிலையில் படத்​தில் டைட்​டில் டீஸர், ஹைதரா​பாத்தில் நடந்த ‘குளோப் ட்ராட்​டர்’ நிகழ்​வில் வெளியிடப்பட்​டது. படத்தில் மகேஷ்​பாபு, ருத்ரா […]

ராமர் கெட்அப்பில் மகேஷ்பாபுவை பார்த்து வியந்துபோனேன்: ராஜமவுலி வாய்ஸ்..

‘பாகுபலி’ ஆர்.ஆர்.ஆர். படங்களின் மூலம் இந்திய அளவில் புகழ் பெற்ற பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி என்பது தெரிந்ததே. தற்போது மகேஷ்பாபுவுடன் இணைந்து உருவாகும்’ படத்திற்கு ‘வாரணாசி’ என டைட்டில் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிமுக டீசரில், காளை ஒன்றின் மீது மகேஷ் பாபு, கையில் திரிசூலத்தை ஏந்தி வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார். ‘மந்தாகினி’ என்ற கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா, ‘கும்பா’ என்ற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடித்து வருகின்றனர். […]

ராஜமவுலி-மகேஷ்பாபு இணைந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு, எப்போது தெரியுமா?

ராஜமவுலி இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் இந்திய அளவில் வரவேற்பு பெற்று வருவது தெரிந்ததே. இந்நிலையில், தற்போது அவரது இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை எக்ஸ் தள உரையாடல் மூலம் தொடங்கியிருக்கிறது படக்குழு. இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தயாராகி வரும் பெரும் பொருட்செலவைக் கொண்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் பெயர், மகேஷ் பாபு உடன் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என எதையுமே படக்குழு […]