அப்பாவின் குரலை ஏ.ஐ. செய்ய அனுமதிக்க முடியாது: எஸ்.பி.பி.சரண் உறுதி
சயின்ஸ் டெவலப்மென்ட் சினிமாவில் புகுந்து, செமையாய் கம்பு சுற்றுகிறது. குறிப்பாக ஏ.ஐ. தொழில் நுட்பம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், மறைந்த பிரபலங்கள் நடித்துள்ளதைப்போல், பாடியுள்ளதைப்போல், பேசியுள்ளதைப்போல் பல படங்களில் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. கடைசியாக வெளியான ‘வேட்டையன்’ படத்தில் கூட மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் பாடியிருப்பதைப்போல் ‘மனசிலாயோ..’ பாடல் அமைந்திருக்கும். இந்நிலையில், ஏ.ஐ தொழில்நுட்பம் குறித்து மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனின் மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் வாயிலாக […]