‘பார்டர்-2’ திரைப்படத்திற்கு, ஐக்கிய அரபு அமீரகத்தில் தடை..
விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் வெளியீடு தொடர்பாக தடைகளை சந்தித்து வருகிறது. இது பற்றிய வழக்கு விசாரணையில் நீதிமன்ற தீர்ப்பு நாளை மறுநாள் 27-ந்தேதி வெளியாகிறது. இதனை படக்குழு மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் நிகழ்ந்த ஒரு திரைப்படத்தின் நிலையை பார்ப்போம்.. இயக்குநர் ஜே.பி.தத்தா இயக்கத்தில் 1997-ம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படம் ‘பார்டர்’. 1971-ம் ஆண்டு நடந்த இந்தியா- பாகிஸ்தான் போர் பின்னணியில் உருவான திரைப்படம் இது. […]