தமிழ் திரையுலகில் கொக்கைன் புழங்கக் காரணம் ஒரு முன்னணி நடிகர்: பாடகி சுசித்ரா அதிரடி..
பாடகி சுசித்ரா தெரிவித்துள்ள தகவல்கள் தற்போது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது: ‘சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் த்ரிஷாவும், கீதாஞ்சலி செல்வராகவனும் என் மீது வழக்கு தொடுத்தார்கள். அவர்கள் என்னிடத்தில் கொக்கைன் இருப்பதாகவும் நான் விற்பனை செய்து வருவதாகவும் புகார் அளித்தார்கள். காவல்துறை எனது வீட்டிற்கு வந்து இரண்டு மணி நேரம் சோதனை செய்தது. அவர்கள் எனது ரத்த மாதிரிகளையும் பெற்றுச் சென்றனர். இறுதியில் என் மீது தவறு இல்லை என்பதால், காவல்துறை அமைதியாக இருந்து விட்டார்கள். […]