Browsing tag

நீதிமன்றம்

‘ஜனநாயகன்’ ரிலீஸ் வழக்கு: இன்றைய விசாரணை விவரம்..

விஜய்யின் கடைசிப் படமாக உருவாகிய ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் மேல்முறையீடு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பு நிறுவனம் தரப்பில், சான்றிதழ் வழங்குவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. ஜனவரி 6-ந்தேதியில் சென்சார் போர்டு தலைவர் பிறப்பித்த முடிவையும், தனி நீதிபதி ரத்து செய்துள்ளார். ஆனால், தயாரிப்பாளர் அந்த கோரிக்கையையே முன்வைக்கவில்லை. ஒரு படத்தை பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்க குழு உள்ளது. அந்த குழு தான் படத்தை பார்த்துள்ளது. படத்திற்கு சான்றிதழ் […]

குடியரசு தினத்தை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ படம் ரிலீஸ்?

விஜய் நடிப்பில் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படத்தை கே.வி.என். நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை ஜனவரி 9-ந்தேதி ரிலீஸ் செய்ய அறிவித்தார்கள். ஆனால், படத்திற்கு சென்சார் சான்று கிடைக்காமல் இருந்ததுடன், மறு ஆய்வு குழுவுக்கு படத்தை பரிந்துரை செய்தது தணிக்கை வாரியம். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது ஜனநாயகன் படத்தை தயாரித்த கே.வி.என். ப்ரொடக்சன்ஸ் நிறுவனம். அந்த வழக்கின் தீர்ப்பு ஜனவரி 9-ந்தேதி வழங்கப்படும் என தனி நீதிபதி பி.டி. ஆஷா […]

‘ஜனநாயகன்’ பட தீர்ப்பை எதிர்த்து, சென்சார் போர்டு மேல்முறையீடு..

ஜனநாயகன் பட ரிலீஸ் விவகாரம் பற்றிக் காண்போம்.. ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்று வழங்கக் கோரி, பட தயாரிப்பு நிறுவனமான, கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, படத்துக்கு யு/ ஏ சான்று வழங்க முடிவு செய்த பின், படத்தை ஆய்வு செய்த குழு உறுப்பினர், புகார் அளித்துள்ளது பிந்தைய சிந்தனை. இதுபோன்ற புகாரை ஏற்றுக் கொண்டால் அது அபாயகரமானதாகி விடும். ஏற்கெனவே படத்தை பார்த்து, […]

ரிலீஸ் விவகாரம்: ஜனநாயகன்போல பராசக்தியும் நீதிமன்றத்தை நாடுகிறதா?

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் வருகிற 10-ந்தேதி ரிலீஸாகும் என்று அறிவிப்பு வெளியானது. இப்படத்தை இன்பன் உதயநிதி வழங்குகிறார். இந்நிலையில், நாளை மறுநாள் ரிலீஸ் இருக்க இதுவரை பராசக்தி படத்திற்கு சென்சார் சான்று வழங்கப்படவில்லை. நாளைக்குள் சென்சார் போர்டு சான்று கொடுத்துவிடும் என்று பராசக்தி படக்குழு நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறது. அந்த நம்பிக்கையில் தான் பராசக்தி டீம் தொடர்ந்து படத்தை விளம்பரம் செய்து வருகிறது. படத்தில் இருக்கும் சில காட்சிகளால் ரிவைஸிங் குழுவுக்கு […]

‘ஜனநாயகன்’ படம் 9-ந்தேதி ரிலீஸாகுமா?: ஐகோர்ட் தீர்ப்பு என்ன?

விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழை வழங்க மத்திய தணிக்கை வாரியம் தாமதிப்பதால், தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். தணிக்கை வாரியத்தின் சார்பில் அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேஷனும், படக்குழு சார்பில் சதிஷ் பராசரன் மற்றும் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர். […]

‘ஜனநாயகன்’ ரிலீஸ் விவகாரம்: தணிக்கை வாரியம் ஐகோர்ட்டில் சொன்ன தகவல்..

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 9-ந்தேதி ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இதுவரை ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. படத்துக்கான அனைத்து பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்காக படக்குழு அனுப்பியது. தொடர்ந்து டிசம்பர் 19-ந்தேதி படத்தை பார்த்த தணிக்கைக் குழு, சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை ம்யூட் செய்யவும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. படம் பார்த்த தணிக்கை […]

தங்கக்கடத்தல் வழக்கில் நடிகை ரன்யாராவ்: கோர்ட் அதிரடி உத்தரவு..

துபாயில் இருந்து கடந்த மார்ச் மாதம் தங்கம் கடத்தி வந்ததாக நடிகை ரன்யா ராவை டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. விசாரணைக்கு பின்பு நடிகை ரன்யா ராவ் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அவரது காதலன் தருண் என்பவர் உள்பட மேலும் சிலர் இவ்வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார்கள். இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. வருவாய் நுண்ணறிவு பிரிவு […]

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை: பிரபல நடிகை மேல்முறையீடு..

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே அத்தாணி பகுதியில், கடந்த 17.2.2017 அன்று பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து கேரவனில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் காரில் வந்த கும்பல் கேரவனை தடுத்து நிறுத்தி, அதன் உள்ளே அத்துமீறி நுழைந்தது. அங்கிருந்த நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது. இதுகுறித்து நடிகை அளித்த புகாரின் பேரில் மாநில குற்றப்புலன் விசாரணை பிரிவு போலீசார் விசாரித்து பல்சர் சுனில் என்கிற சுனில்குமார் என்பவர் உள்பட சிலரை போலீசார் […]

கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிட கோர்ட் தடை..

கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘வா வாத்தியார்’ படத்தை ஸ்டுடியோ கிரின் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இத்திரைப்படம் வரும் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் கார்த்தி நடிப்பில் ‘மார்ஷல்’ என்ற படமும் உருவாகி வருகிறது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற சொத்தாட்சியர் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவர் திவாலானவர் என கடந்த 2014-ம் ஆண்டு அறிவித்து அவருடைய சொத்துகளை நிர்வகிக்க சொத்தாட்சியரையும் […]

‘குட் பேக் அக்லி’ படத்தில் இளையராஜா பாடல்கள் குறித்த வழக்கு: ஜகோர்ட் உத்தரவு..

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வெளியான படம் ‘குட் பேட் அக்லி’ படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து, அடுத்த படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளனர். ‘குட் பேக் அக்லி பட’த்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். படத்தில் இளையராஜாவின் ‘ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி, இளமை இதோ இதோ’ உள்ளிட்ட பாடல்கள் இடம் பெற்றிருந்தன. இப்பாடல்களை தன்னுடைய அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும் அதற்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும், இளையராஜா […]