சினிமாவில் இருந்து விலகியது ஏன்?: நடிகை முமைத்கான் ஓபன் டாக்..
தமிழ் சினிமாவில் போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்பட பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் முமைத் கான். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். சில வருடங்களாக சினிமாவில் அவரைப் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் 7 வருடங்களாக, தான் படுத்த படுக்கையாக இருந்ததாகவும் 15 நாட்கள் கோமாவில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஏழு வருடங்களுக்கு முன் வீட்டுக்குள் ஒரு விபத்தைச் சந்தித்தார் முமைத் கான். அதில் அவர் மூளையில் 5 நரம்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. […]