12 விருதுகளை வென்ற ‘சாட்சி பெருமாள்’ திரைப்படம் ஓடிடி.யில் ரிலீஸாகிறது; கதை என்ன தெரியுமா?
வாழ்வியலில் நிகழும் எதார்த்தங்களின் தொகுப்பாக, உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் உருவாக்கப்பட்ட படம் சாட்சி பெருமாள். இப்படம், ஒடிடி.யில் ரிலீஸாகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. ‘சாட்சி பெருமாள்’ என்கிற படத்திற்கு மதன் கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தில் அசோக் ரங்கராஜன், வி.பி.ராஜசேகர், பாண்டியம்மாள், எம்.ஆர்.கே., வீரா உட்பட பலர் நடித்துள்ளனர். மஸ்தான் இசை அமைத்துள்ளார். படத்தை இயக்கியுள்ள ஆர்.பி.வினு கூறும்போது, ‘பத்திரப் பதிவு அலுவலகங்களில் எப்போதும் சாட்சி கையெழுத்துப் போடுபவர்கள் இருப்பார்கள். அப்படி ஒருவரின் கதைதான் இது. […]