இயக்குனர் அனுராக் காஷ்யப் வெளியிட்ட கடுமையான பதிவு: சர்ச்சையாகி பரவுகிறது
பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் தனது வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள தகவல் சர்ச்சையாகி உள்ளது. அவர், வெளியிட்டுள்ள பதிவில், பஞ்சாப் 95, தடக் 2 மற்றும் புலே போன்ற படங்களைத் தடை செய்ததற்காக தணிக்கைக்குழு மற்றும் மத்திய அரசை கடுமையாக சாடி பதிவிட்டுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அனுராக் காஷ்யப், ‘நான் வாழ்வில் செய்த முதல் நாடகம் ஜோதிபா மற்றும் சாவித்ரிபாய் ஃபுலே பற்றியது. சாதியை எதிர்த்துப் போராடிய அவர்களுக்கு இந்த நாட்டில் இடமில்லையா? வெட்கப்படுகிறார்களா, […]