Browsing tag

கே.பாக்யராஜ்

புதிய முயற்சிகளை மேற்கொள்ள உள்ளேன்: கே.பாக்யராஜ் பேச்சு..

பன்முகத்திறமையாளரான இயக்குநர் கே.பாக்யராஜ், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி, அவரது பிறந்தநாளில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, பாக்யராஜுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர்பாபு, கமல்ஹாசன் எம்.பி., நடிகர் பார்த்திபன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் நடிகர்கள், திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இச்சூழலில் பாக்யராஜ் கூறிய​தாவது: திரைத்​துறை​யில் 50 ஆண்​டு​கள் என்​பதை நினைத்​துக் […]

காதலால் ஏற்படும் வலியை சொல்லும் படம் ‘புகார்’: படக்குழு அப்டேட்ஸ்..

ஸ்ரீமதுராஜா தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம், ‘புகார்’. இதை ‘ரூட்’ படத்தை இயக்கிய ஏ.சி.மணிகண்டன் இயக்குகிறார். கதாநாயகியாக ரஷ்மிதா நடிக்கிறார். 2-வது ஹீரோவாக ராஜ்கிரண் நடிக்கிறார். மேலும் ஜனுஷ்கா, மணி செல்வம் உள்பட பலர் நடிக்கின்றனர். க்ரைம் த்ரில்லராக இப்படம் உருவாகிறது. பிச்சைக்கனி, ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் பிரபு இசையமைக்கிறார். ‘இன்றைய சூழலில் காதலால் பல ஆணவக் கொலைகள் அரங்கேறுகின்றன. அந்தக் குடும்பங்கள் சந்திக்கும் வலி, அதன்பிறகு அந்த குடும்பங்களின் நிலைமை என்ன ஆகிறது என்பது பற்றியும், […]

சாந்தனு நடிக்கும் ‘மெஜந்தா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..

திரையுலகில் வாரிசு நடிகர்கள் வருவது இயல்பு. அதில் தனித்திறமையுடன் நிற்பவர்கள் குறைவு. இது தொடர்பான தகவல் பார்ப்போம்.. கே.பாக்யராஜின் மகன் சாந்தனு ‘சக்கரைகட்டி’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சில படங்களில் வெற்றிகண்ட சாந்தனு, சில படங்களில் தோல்வியும் சந்தித்து வந்தார். சாந்தனு நடிப்பில் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ என்ற படம் வரவேற்பை பெற்றது.பின்னர் வெளியான ‘இராவண கூட்டம்’ படமும் கவனத்தை ஈர்த்தது. தற்போது, பரத்மோகன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜ், அஞ்சலி நாயர் ஆகியோர் […]

நடிகைகள் ரேவதி, ரஞ்சனி, ராதா குறித்து கே.பாக்யராஜ் சுவாரஸ்ய தகவல்..

‘ஐபிஎல்- இந்தியன் பீனல் லா’ திரைப்படம் வருகின்ற 28-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. கருணாநிதி இயக்கியுள்ள இப்படத்தில் கிஷோர், டிடிஎஃப் வாசன், குஷிதா, அபிராமி, சிங்கம் புலி, ஹரிஷ் பெரேடி, ‘ஆடுகளம்’ நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ் பேசியதாவது, ‘நடிகை ரேவதி முதன்முதலில் என்னுடைய ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தில் நடிப்பதற்காகத்தான் வந்தார். அவருடைய வயது கதாபாத்திரத்துக்கு பொருத்தமானதாக இல்லை. சிறிது காலம் காத்திருங்கள் என்று சொன்னேன். இந்த இடைவெளியில் எங்கள் […]

‘அந்த 7 நாட்கள்’ புதிய படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் பேச்சு..

கே.பாக்யராஜ், ராஜேஷ், அம்பிகா நடிப்பில் வெளியான பழைய திரைப்படம் ‘அந்த 7 நாட்கள்’. தற்போது அறிமுக இயக்குநர் எம்.சுந்தர் இயக்கியுள்ள ‘அந்த 7 நாட்கள்’, கே.பாக்யராஜிடம் தலைப்பை அனுமதி வாங்கி பயன்படுத்தி உள்ளனர். காதல் படமான இதில் அஜித்தேஜ், ஸ்ரீஸ்வேதா, பாக்யராஜ், நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். சச்சின் சுந்தர் இசையமைத்துள்ளார். கோபிநாத் துரை ஒளிப்பதிவு செய்துள்ளார். பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் சார்பில் முரளி கபீர்தாஸ் தயாரித்துள்ளார். படம் பற்றி இயக்குநர் […]

தமிழுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்பது நோக்கம் அல்ல: கே.பாக்யராஜ் தெளிவுரை..

‘திரைக்கதை மன்னர்’ கே.பாக்யராஜ் தெரிவித்துள்ள தகவல்கள் காண்போம்.. அரசகுமார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கயிலன்’. அருள் அஜித் இயக்கியுள்ள இப்படத்தில் ஷிவா, ரம்யா பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் கூறியதாவது: ‘கே.ராஜன் பேசும்போது தமிழில் பெயர் வைப்பதை பற்றி குறிப்பிட்டார். அதைக் கேட்டவுடன் என்னுடைய படங்களை பற்றி யோசித்தேன். அதில், ஒரு படத்திற்கு ‘டார்லிங் டார்லிங் டார்லிங் ‘ என்று பெயர் வைத்திருந்தேன். அதன் பிறகு […]

எஸ்.ஜே.சூர்யாவிடம் வருந்தி பேசிய ரஜினிகாந்த்: வைரலாகும் நிகழ்வு..

எஸ்.ஜே.சூர்யாவிடம் வருத்தம் தெரிவித்த ரஜினியின் வார்த்தைகள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘கூலி’ படம் முடித்து ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்கள் மீதும் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளனர். ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ந்தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யாவிடம் ரஜினிகாந்த் வருந்தி பேசிய விஷயம் வைரலாகி வருகிறது. அதாவது, எந்த ஒரு வளர்ந்துவரும் கலைஞரும் தன்னுடைய பட விழாக்களுக்கு ரஜினிகாந்த் வர வேண்டும் என விரும்புவார்கள். அவ்வாறு சூர்யாவும் […]

குஷ்பூவின் மகள் அவந்திகா, ஹீரோயினியாக அறிமுகம்: இயக்குனர் யார்?

சினிமாவில் கதாநாயகியாக அவந்திகா அறிமுகமாக உள்ளார். இது பற்றிய தகவல் பார்ப்போம்.. சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘முறைமாமன்’ படத்தில் குஷ்பூ நடித்தபோது இருவரும் காதலித்து, திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என 2 மகள்கள் உள்ளனர். அவர்களில் அனந்திகா ‘தக் லைஃப்’ படத்தில் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிகிறார். இன்னொரு மகள் அவந்திகாவுக்கு நடிப்பதில் ஆர்வம் இருப்பதாக தகவல்கள் பரவிக் கொண்டிருந்தன. இந்நிலையில், அவந்திகா தெரிவிக்கையில், ‘நான் சினிமாவுக்கு வந்தால் கண்டிப்பாக அம்மாவுடன் என்னை […]