தணிக்கைத் துறைக்கு, பா.ரஞ்சித்-மாரி செல்வராஜ் கடும் கண்டனம்..
‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு சிக்கல் தொடர்பாக திரையுலகினர் பலரும் தணிக்கை துறையினரை கடுமையாக சாடி கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ‘ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை விவகாரத்தில் மத்திய திரைப்படத் தணிக்கைத் துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது. தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அப்பட்டமாகவே தெரிகிறது. அதேபோல, ‘பராசக்தி’ திரைப்படத்துக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் போன்றே என் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களுக்கும், நீலம் தயாரிப்பில் வெளிவந்த […]