Amith Sha Admitted in AIMA Hospital : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென்று அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் உடல் சோர்வு, உடல் வலி போன்ற காரணமாக தற்போது எய்ம்ஸ் மனையில் திடீரென்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மருத்துவ நிர்வாகம் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டதாவது:
3-4 நாட்களாக உள்துறை அமைச்சர் அமித் ஷா உடல் வலி மற்றும் உடல் சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ஏற்கனவே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு நோய் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. எனினும் கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் நல்ல உடல்நிலையில் உள்ளார். மருத்துவமனையில் இருந்தவாறு தனது பணியை அவர் கவனித்து வருவார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரண்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவக் குழுக்கள் கண்காணிப்பில் அமித்ஷா இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.