இரண்டு கதாநாயகர்கள் நடிக்கும் கதைக்களம் கொண்ட படங்களில் நான் நடிக்க மாட்டேன் என்று அண்மையில் எடுக்கப்பட்ட பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார் அல்லு அர்ஜுன்.

தெலுங்கு சினிமாவில் மாபெரும் நட்சத்திரமாக இருப்பவர் தான் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் அன்னையில் வெளியான “புஷ்பா தி ரைஸ்” திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றதோடு அவருக்கு கூடுதலான அடையாளத்தை உருவாக்கியது. இதன் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் அண்மையில் எடுக்கப்பட்ட பேட்டியில் ஹிந்தியில் நடிப்பது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.

அதாவது இப்போதைக்கு இந்தியில் நடிப்பது என்பது எனது கம்போர்ட் சோனியிலிருந்து விலகி இருக்கிறது. ஆனால் அதற்கான தேவை ஏற்பட்டால் அதில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன். இந்தியில் நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது ஆனால் அது உறுதியாகவில்லை. வேற ஒரு இன்டஸ்ட்ரியல் நடிக்க ரிஸ்க் எடுக்க வேண்டும் கூடுதலாக தைரியமும் வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் இரண்டு கதாநாயகர்கள் நடிக்கும் கதைக்களம் கொண்ட படங்களில் நான் நடிக்க மாட்டேன் ஏனென்றால் நாம் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் நாம் மட்டுமே கதாநாயகனாக இருக்க முடியும். நமக்கு வரும் வாய்ப்பு அப்படித்தான் இருக்க வேண்டும்.

அதை தவிர எனக்கு மற்ற கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமில்லை. பெரிய ஸ்டார் ஒருவரை இரண்டாம் கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதில் அர்த்தமில்லை. அது படத்தை சேதப்படுத்தும் என்று தனது கருத்துக்களை ஓப்பனாக அந்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.