குடும்பத்தினர் குறித்து மனம் திறந்து பேசிய அஜித்.!!

குடும்பத்தினர் குறித்து அஜித் மனம் திறந்து பேசி உள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது கார் ரேஸில் அஜித் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்ததாக அஜித் 64 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
இந்தப் படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீபத்தில் அஜித் பேசியிருப்பது தற்போது வெளியாகி உள்ளது.
அதாவது குடும்பமான மகன் மகள் குறித்து அஜித் மனம் திறந்து பேசி லேசாக கண் கலங்கியும் இருக்கிறார் அதாவது என் மகள் மகனுடன் பள்ளிக்கு அல்லது வேறு இடங்களுக்கு செல்லும்போது நான் ஏன் மற்ற அப்பாக்களை போல் இல்லை என அழுது என்னிடம் கேட்கிறார்கள் என்று சொல்லி கண்கலங்கி உள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
