Ajith : ஒரே அறிக்கையால் அஜித்தின் மீதான மதிப்பு பல மடங்காக உயர்ந்து விட்டது என பிரபல இயக்குனரான கரு. பழனியப்பன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித். சமீபத்தில் இவருடைய ரசிகர்கள் என்ற பெயரில் 100 பேர் திருப்பூரில் பா.ஜ.க-வில் இணைந்தனர்.
பேட்டையை முந்திய விஸ்வாசம் – கார்த்தி சுப்புராஜ் ஆவேச பதில்.!
அப்போது தமிழிசை அஜித் ரசிகர்கள் மோடியின் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என கூறினார்.
இதனையடுத்து தல அஜித் எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. என்னுடைய பெயரையும் என் ரசிகர்கள் பெயரையும் அரசியலுக்காக பயன்படுத்த வேண்டாம் என கூறியிருந்தார்.
தலனாலே தனி ரகம் தான் – அஜித்தின் அறிக்கை குறித்து பிரபலங்களின் கருத்து.!
அஜித்தின் இந்த அறிக்கைக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்களிடம் இருந்து வரவேற்பு குவிந்து வந்தது. இந்நிலையில் தற்போது இயக்குனர் கரு. பழனியப்பன் அவர்களும் இந்த ஒரு அறிக்கையால் அஜித்தின் மீதான மதிப்பு பல மடங்காகி விட்டது என கூறியுள்ளார்.