நடிகர் அஜித் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன விஷயத்தை தற்போது நிறைவேற்றி இருக்கிறார்.

தென்னிந்திய திரை உலகில் தல, அல்டிமேட் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்க பல திரை நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இசையமைப்பாளராக இருக்கும் ஜிப்ரானிடம் நடிகர் அஜித் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதை நிறைவேற்றி இருக்கிறார்.

அதாவது, 2019 ஆம் ஆண்டில் இசையமைப்பாளர் ஜிப்ரானிடம் நாம் கண்டிப்பாக சேர்ந்து பணியாற்றுவோம் என்று அஜித் கூறியிருக்கிறார். அதன்படி வலிமை திரைப்படத்தில் பின்னணி இசை மட்டும் வாசித்த ஜிப்ரான், தற்போது துணிவு திரைப்படத்தில் முழுமையாக இசையமைத்திருக்கிறார். இதனால் சொன்னதை நிறைவேற்றிய அஜித் குறித்த இந்த தகவல் அஜித் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. மேலும் இப்படத்தில் ஜிப்ரான் இசையில் உருவாகி இருக்கும் பாடல்கள் முடிவடைந்த நிலையில் விரைவில் முதல் பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.