நான் விஜய் ரசிகன் தான் எனக் கூறியுள்ள அஜய் ஞானமுத்து சூர்யா பற்றிய கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.
Ajay Gnanamuthu Comments on Top Heroes : தமிழ் சினிமாவில் டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கியிருப்பவர் அஜய் ஞானமுத்து. மேலும் இவர் கோப்ரா என்ற படத்தை இயக்கி வருகிறார்.
தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அப்போது நீங்கள் யார் ரசிகர் என்று கேட்டதற்கு நான் விஜய் ரசிகர் என்று கூறியுள்ளார்.
மேலும் விஜய் பற்றி ஒரே வார்த்தையில் கூறுங்கள் என கேட்டதற்கு ஒரே தலைவன் என கூறியுள்ளார்.
மேலும் இன்னொரு ரசிகர் இதே கேள்வியை கேட்க யாரடிச்சா பொறி பறக்குமோ பூமி அதிருமோ அவருடைய ரசிகர் என விஜய்யின் டயலாக்கில் பதில் கொடுத்துள்ளார்.
மேலும் இன்னொரு ரசிகர் சூர்யா பற்றி கூறுங்கள் எனக் கேட்டதற்கு சூர்யாவுடன் ஏழாம் அறிவு படத்தில் பணியாற்றியுள்ளேன்.
மிகவும் அர்ப்பணிப்பான நடிகர். அவரின் அர்ப்பணிப்பை பார்த்து வியந்துள்ளேன் என கூறியுள்ளார்.
மேலும் விஜயுடன் படம் பண்ணுவது எப்போது எனக் கேட்டதற்கு நானும் அதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன் என பதிலளித்துள்ளார்.