பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து பிரபல நடிகை விலகப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தினம் தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பிகளின் பாசத்தையும் கூட்டுக் குடும்பத்தையும் அடிப்படையாகக் கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் கதிர் முல்லை ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக முல்லை வேடத்தில் சித்ரா நடித்து வந்த போது ஏகபோக வரவேற்பு இருந்தது. அவருடைய இறப்புக்குப் பிறகு காவியா முல்லை என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க தொடங்கினார்.

வெள்ளித்திரை வாய்ப்பு காரணமாக அவர் இந்த சீரியலில் இருந்து விலக அதன் பிறகு தற்போது லாவண்யா இந்த சீரியலில் முல்லையாக நடித்து வருகிறார். இப்படி முல்லை கதாபாத்திரத்தில் அடுத்தடுத்து மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்திலும் மீண்டும் மாற்றம் ஏற்பட உள்ளது.

முதலில் தீபிகா ஐஸ்வர்யாவாக நடித்து வர அவர் இந்த சீரியலில் இருந்து விலக சாய் காயத்ரி ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். சில தினங்களுக்கு முன்னர் அவரும் வெள்ளித்திரையில் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக சொல்லி டப்பிங் பேசிய வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

இதனால் அவருக்கும் சீரியலில் நடிக்க நேரம் இருக்காது என்பதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து அவரும் விலகலாம் என சொல்லப்படுகிறது. இதனால் இனி ஐஸ்வர்யாவாக யார் நடிப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் இப்படி அடிக்கடி நடிகைகள் மாற்றப்பட்டு வருவதை பார்த்த ரசிகர்கள் இது என்ன பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு வந்த சோதனை என கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.