சன் டிவி சீரியல் நடிகை தொடர்ந்து மேலும் ஒரு நடிகர் சீரியல் இருந்து விலகியுள்ளார்..
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன முன்னணி தொலைக்காட்சியாக சன் டிவி இருந்து வருகிறது. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியலுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
அந்த வகையில் மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா சீரியலில் இருந்து ஹீமா பிந்து வெளியேறுவதாக அறிவித்ததை தொடர்ந்து மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் மற்றொரு சீரியலான மலர் சீரியலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார் நாயகன் அக்னி.
செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமான இவர் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது காலில் ஏற்பட்ட காயம் காரணமாகவும் அது குணமடைய நீண்ட காலமாகும் என்ற காரணத்தினாலும் இந்த சீரியலில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார்.