Actress Sithara About Her Marriage
Actress Sithara About Her Marriage

இன்னமும் நான் சிங்கிள் தான் என 47 வயது ஆகியும் திருமணம் செய்துகொள்ளாத நடிகை அதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

Actress Sithara About Her Marriage : சினிமாவில் நாயகியாக நடிக்கும் நடிகைகள் தனக்கு மார்க்கெட் இருக்கும் வரை நடித்து விட்டு அதன் பின்னர் தொழிலதிபரையோ அல்லது தன்னுடன் நடித்த நடிகரையோ திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடுவது வழக்கம்.

இதுவரை பெரும்பாலான நடிகைகள் அப்படித்தான் செய்துள்ளனர். திருமணமே வேண்டாம் என இருக்கும் நடிகைகள் வெகு சிலரே.

என்கிட்டே பசங்க தாங்க மாட்டாங்க.. வேறு திருமணம் குறித்து பேசிய பிக் பாஸ் காஜல் – இதோ இத நீங்களே பாருங்க.!

அவர்களில் ஒருவர் தான் கேபி பாலச்சந்தர் இயக்கத்தில் புதுப்புது அர்த்தங்கள் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமான கேரளத்து தேசத்தை சேர்ந்த சித்தாரா.

முதல் படமே சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து அவருக்கு தமிழில் வாய்ப்புகள் குவிந்தன. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அத்தனை மொழிகளிலும் நடித்து பிரபலமானார் சித்தாரா.

தற்போது இவருக்கு 47 வயதாகியும் தொடர்ந்து படங்களில் அம்மா, அக்கா வேடங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரை சீரியலில் நடிக்கிறார்.

இருப்பினும் இதுநாள் வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இதற்கான காரணம் என்ன என்பதை அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நான் என் வாழ்க்கையில் முக்கியமான நபரை இழந்து விட்டேன் அது வேறு யாருமில்லை என் அப்பா தான். அவரை இழந்த பிறகு எனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லவே இல்லை.

இன்று வரை அப்படி ஒரு எண்ணம் என் மனதிற்குள் வரவில்லை எனக் கூறியுள்ளார். இனி அப்படி ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் திருமணம் செய்து கொள்வீர்களா என கேட்டுள்ளனர்.

எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை எனும் போது எப்படித் திருமணம் செய்து கொள்வேன்? நாளை யாருக்கு என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாது என அவர் பதில் அளித்துள்ளார்.