நடிகை சித்தி இட்னானி பகிர்ந்திருக்கும் லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் வளர்ந்து வரும் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சித்தி இட்னானி. இவர் தமிழில் சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான வெந்து தணிந்தது காடு என்னும் திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் கடந்த ஜூன் 2 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதற்கிடையில் சமூக வலைதள பக்கங்களிலும் பிசியாக இருந்து வரும் சித்தி இட்னானி அவ்வப்போது வெளியிட்டு வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் மனநலம் குன்றிய மாணவர்களுடன் மகிழ்ச்சியாக செலவழித்த நேரத்தை குறிப்பிட்டு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு இருக்கிறார். தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர், நீங்கள் ஒருவருக்கு பரிசளிக்க கூடிய சிறந்த விஷயம் உங்கள் நேரம். மனநலம் குன்றிய மாணவர்களுடன் நேரத்தை செலவிட்டேன். அவர்கள் முகத்தில் இருக்கும் புன்னகை விலைமதிப்பற்றது. என்று குறிப்பிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் இடையே லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.