மீண்டும் நடிக்க வந்துள்ள பிரியங்காவுக்கு ஹீரோவாக நடிக்க போவது யார் என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் பிரபலமடைந்து அந்த சீரியல் முடிவுக்கு வந்ததும் சீதாராமன் சீரியலில் நடித்து வந்தவர் பிரியங்கா நல்காரி.
சீதாவாக இவரது நடிப்பு பாராட்டப்பட்டு சீரியல் நல்ல ரேட்டிங் ஒளிபரப்பாகி வந்த நிலையில் தனது நீண்ட நாள் காதலர் ராகுலை திருமணம் செய்து கொண்ட பிரியங்கா கணவருடன் நேரத்தை செலவிடுவதற்காக இந்த சீரியல் இருந்து வெளியேறினார்.
சீரியலில் இருந்து வெளியேறிய இரண்டே மாதத்தில் தற்போது மீண்டும் கம் பேக் கொடுக்க உள்ளார். அதுவும் ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய சீரியலில் தான் என்பது ஏற்கனவே தெரியவந்தது.
நளதமயந்தி என்ற பெயரில் சமையலை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாக உள்ள சீரியலில் தான் பிரியங்கா நல்காரி நாயகியாக நடிக்க உள்ளார். மேலும் இந்த சீரியலில் ஹீரோவாக நந்தா மாஸ்டர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டர் ஆக வலம் வந்த இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோகுலத்தின் சீதை சீரியல் மூலம் சின்னத்திரையில் அடி எடுத்து வைத்தார். இந்த சீரியலுக்குப் பிறகு விஜய் டிவியின் கண்ணே கலைமானே சீரியல் நடித்து வந்த இவர் சமீபத்தில் அதிலிருந்து வெளியேறினார்.
தற்போது இவர் தான் பிரியங்கா நல்காரிக்கு ஜோடியாக நளதமயந்தி சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.